என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாம்பூச்சி"

    • இது அரிதான நிகழ்வு. விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் கொண்டது என்கிறது நாசா.
    • சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை எனப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது.

    நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளை தோன்றியுள்ளது. இந்த உருவாக்கம் செப்டம்பர் 11 அன்று புகைப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு அதன் அசாதாரண வடிவம் மற்றும் விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் ஆகியவற்றால் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை என அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில், சூரியனின் காந்தப்புலங்கள் திறந்து, சூரியக் காற்று விண்வெளியில் தப்பிச்செல்ல அனுமதிக்கிறது. அந்தத் துளையிலிருந்து வரும் சூரியக் காற்று செப்டம்பர் 14-ம் தேதிக்குள் பூமியை அடையும், இது புவி காந்த புயல்களை ஏற்படுத்தக் கூடும் என நாசா தெரிவித்துள்ளது.

    • சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய அளவில் 'பெரிய பட்டாம்பூச்சி மாதம்' செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டு வருவதோடு, கணக்கெடுக்கும் பணிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் செம்மொழி பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பட்டாம்பூச்சியை கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் ஈடுபட உள்ளனர். வரும் வாரத்தில் ராணிமேரி கல்லூரி வளாகம் மற்றும் மைலேடீஸ் பூங்கா, கொரட்டூர் ஏரிக்கரை உள்பட முக்கிய பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் களம் இறங்குகின்றனர்.

    இதுகுறித்து ராணி மேரி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பவானி கோவிந்தராஜூலு கூறும் போது, "கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. தேனீக்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகள் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பட்டாம்பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்கவும், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்" என்றார்.

    ×