search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய கிரகணம்"

    • சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது.
    • சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன.

    கடலூர்:

    சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழு வதும் உள்ள கோவில்கள் இன்று மதியம் முதல் மாலை வரை கோவில்கள் சாற்றப்படுகிறது. மேலும் அனைத்து கோவில்களி லும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்து பின்பு திறக்கப்பட உள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1600 கோவில்கள் உள்ளன. இதில் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், புதுப்பா ளையம் ராஜகோபால சாமி கோவில், திருப்பா திரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில், திரு வதிகை விரட்டா னேஸ்வரர் கோவில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லை காளிய ம்மன் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன. இன்று மாலை சூரிய கிரகணம் உள்ளதால் அனைத்து கோவில்களிலும் இன்று மதியம் முதல் மாலை சூரிய கிரகணம் முடிந்து பின்பு பரிகார பூஜைகள் மற்றும் கோவில் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சாமி கும்பிட அனுமதிக்கப்படு கின்றனர். இது மட்டும் இன்றி இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியதை யொட்டி முருகர் கோவில்களில் இன்று முதல் சஷ்டி விழா கோலகலமாக தொடங்க ப்பட்டு உள்ளது. மேலும் சூரிய கிரகணம் முடிந்து சஷ்டி விழா அனைத்து முருகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை உடன் தொட ங்கி நடைபெற உள்ளது.

    இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதல் சூரிய கிரகணம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குறிப்பிட்ட நட்சத்தி ரம் மற்றும் ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்ய ப்பட வேண்டும் என தெரிவி க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்நேரத்தில் பொதுமக்கள் யாரும் உணவு உண்ணாமலும், வெறும் கண்களால் சூரியனை காணாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் இன்று பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதுதான் காரணம்.
    • பாதுகாப்பாக பார்ப்பதற்கு மயிலார் பில்டர் மற்றும் பாலிமர் பில்டரில் சூரிய கண்ணாடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் இன்று மாலை நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:

    நாடு முழுவதும் இன்று பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதுதான் காரணம். இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லேவில் சூரிய கிரகணம் 55 சதவீதம் வரை தெரியும். திருவனந்தபுரம் வான் இயற்பியல் ஆய்வகத்தில் கிரகணம் இரண்டு சதவீதமும், கொடைக்கானலில் ஏறத்தாழ மூன்று முதல் நான்கு சதவீதமும் தென்படும்.

    இந்த கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி, இதனுடைய உச்சகட்ட மறைப்பு மாலை 5 மணி 39 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும் போது 6 மணி 48 நிமிடமுமாகும்.

    இதனை பாதுகாப்பாக பார்ப்பதற்கு மயிலார் பில்டர் மற்றும் பாலிமர் பில்டரில் சூரிய கண்ணாடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடி இல்லாமல் அதை வேறு முறைகளில் பார்த்தால் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தை அனைவரும் கண்டுகளிக்க கொடைக்கானல் சோலார் அப்சேர்வேட்டரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

    மதுரை:

    சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது. அதாவது இன்று மாலை 5:23 மணி முதல் 6:23 மணி வரை நிகழும். அந்த நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திம காலம் மாலை 5:51 மணிக்கு சுவாமிகளுக்கு தீர்த்தம் வழங்கி, கிரகணகால அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு சந்திரசேகர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்படும். எனவே இங்கு வழக்கமாக நடத்தப்படும் கோலாட்ட உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவை இன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்கு பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை 8 மணி நேரம் மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி உப ஆலயங்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முத்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், கீழமாசி வீதி தேரடி கருப்பண்ண சுவாமி கோவில், ஏழுகடல் காஞ்சன மாலை அம்மன் கோவில், விநாயகர் கோவில், கீழஆவணி மூலவீதி காலபைரவர் கோவில்,

    தெற்கு மாசி வீதி தென்திருவாலய சாமி கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சிம்மக்கல் வடக்குவாசல் அனுமார் கோவில், ஆதி சொக்கநாதர் கோவில், செல்லாத்தம்மன் கோவில், திருமலைராயர் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், புட்டுத்தோப்பு கடம்பவனேஸ்வரர் கோவில்,

    செல்லூர் பரிபூரண விநாயகர் கோவில், திருவாபுடையார் கோவில், நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், ஆமூர் ஐயம்பொழில் ஈஸ்வரன் கோவில், சுண்ணாம்பூர் மகா கணபதி கோவில், திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில், திருமறை நாதர் கோவில், கொந்தகை தெய்வ நாயகப் பெருமாள் கோவில் ஆகிய 23 கோயில்களிலும் இன்று மாலை நடை சாத்தப்படும் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும்.
    • வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.

    சென்னை:

    சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    உலக அளவில் சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும். இதை ரஷியாவின் தெற்கு பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காண முடியும். அப்போது உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் நிகழாது.

    அதிகபட்சம் ரஷிய நாட்டின் மத்திய பகுதிகளில் மட்டும் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும்போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும். இதே போன்று இந்தியாவின் மேற்பகுதியில் உள்ள நகரங்களிலும் இந்த நிகழ்வை காணலாம்.

    இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களை கொண்டு பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை உடைய கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச்செய்தும் பார்க்கலாம்.

    இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
    • சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என எச்சரிக்கை.

    தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

    வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும். சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் ஊத்துக்கோட்டை, ஆரணியை அடுத்த, சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சூரிய கிரகணம் தெரியும்.
    • கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது.

    புவனேஸ்வர்:

    தீபாவளிப் பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ம் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்றும் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

    அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் செவ்வாய்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது.
    • சூரிய கிரகணம் தொடங்கும் போது பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணத்தின் போது கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணத்தின் போது கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 25-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது கோவில் வளாகத்தில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
    • சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அப்போது முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவிலிலும் கிரகணத்தை முன்னிட்டு 25-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்படுகிறது.

    சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவிலின் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

    • பகல் 1 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும்.
    • மாலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • 25-ந்தேதி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி கிடையாது.

    நாடு முழுவதும் தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 25-ந் தேதி நடை திறப்பில் மாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25-ந் தேதி காலை வழக்கம் போல் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும்.

    பகல் 1 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்று ரத வீதிகளில் வீதி உலா வந்த பின்னர் மீண்டும் மாலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    மேலும் அன்றைய தினம் பகல் 1 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவோ, கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிகாலை 5 மணி முதல் 1 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடை சாத்தப்படும் வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரகண நேரத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம்.
    • கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    25.10.2022 அன்று மதியம் 2.28 மணி முதல் கிரகண அமைப்பு உருவாகத் தொடங்கினாலும், உச்ச பரிணாமமாகத் தெரிவது மாலை 5 மணிக்கு மேல்தான்.

    சூரிய கிரகண ஆரம்ப காலம் மாலை 5.14 மணி.

    சூரிய கிரகண மத்திய காலம் மாலை 5.42 மணி.

    சூரிண கிரகண முடிவு காலம் மாலை 6.10 மணி.

    கிரகணம் என்பது வானில் தோன்றுகின்ற ஒரு அதிசய, அற்புத நிகழ்வு. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும் பொழுது ஏற்படுகின்ற நிகழ்வுதான் 'கிரகணம்' என்று சொல்வார்கள். ஆற்றல் நிறைந்த கிரகண காலத்தில் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கிரகண காலத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் பற்றிப் பஞ்சாங்கம் மூலமாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

    தோஷம் பெறும் நட்சத்திரங்களுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்பதை நாம் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது இந்த சுபகிருது ஆண்டில் ஐப்பசி மாதம் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று `பார்சுவ சூரிய கிரகணம்' ஏற்படுகிறது. அன்றைய தினம் சுக்லபட்சம் பிரதமை திதியில் ராகுவிற்குரிய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில், துலாம் ராசியில் கேது கிரகஸ்தம் கூடிய நேரத்தில் கிரகணம் ஏற்படுகிறது.

    இந்தக் கிரகணத்தால் தோஷம் பெறும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகியவை என்பதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்திக்குரிய வழிபாடு, பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

    கிரகணத்தை நேராகக் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகண ஆரம்பத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அல்லது கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    கர்ப்பிணிப் பெண்கள், கிரகண நேரத்தில் உடலில் சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. ஏனென்றால் அந்த நேரத்தில் ஏற்படுகின்ற கதிர்வீச்சின் தாக்குதலால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கிரகண நேரத்தில் உடலில் உள்ள ஜீரண பகுதிகள் வலிமை இழக்கும். எனவே அப்போது திட உணவுகளை சாப்பிடக்கூடாது. பசி உள்ளவர்கள் திரவ ஆகாரங்களை சாப்பிடலாம். உணவுப் பொருட்களில் கிரகண கதிர் வீச்சுக்களின் தாக்கம் இல்லாமல் இருக்க, தர்ப்பைப் புல் போட்டு வைப்பது நல்லது.

    உணவுப் பாத்திரம், தண்ணீர்ப் பானை போன்றவற்றின் மேல் தர்ப்பைப் புல் போட்டு வைக்கலாம். அல்லது வைக்கோல் துரும்பும் போட்டு வைக்கலாம். தர்ப்பைப் புல் எல்லாவிதமான தீய சக்தியில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மை கொண்டது. விஷ முறிவுச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெறும் பொருளாகவும் அது கருதப்படுகிறது. எனவே தர்ப்பைப் புல்லை கையில் உள்ள மோதிர விரலில் சுற்றி வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் தலையில் ஒரு தர்ப்பைப் புல்லை சொருகி வைத்துக்கொள்ளலாம்.

    இந்த கிரகண கால நேரம், ஒரு அருமையான நேரம் ஆகும். வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கோவில்களில் நடை மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் நடை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னா் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    கிரகண நேரத்தில் நமது இல்லத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். இந்த வேளையில் இறை நாமத்தை ஒருமுறை நாம் சொன்னால் ஆயிரம் முறை சொன்ன பலன் நமக்குக் கிடைக்கும். முற்காலத்தில் எல்லாம் கற்றுத் தேர்ந்த நம்பிக்கை மிக்க சீடர்களுக்கு கிரகண காலத்தில் தான் குரு உபதேசங்களை வழங்குவார். குரு மூலம் தீட்சை கிடைக்கும் நேரமாக இந்த நேரம் கருதப்படுகிறது. இறையருள் சித்திக்கும் இந்த நேரத்தில் இல்லத்தில் இறை நாமங்களை உச்சரிப்பது நல்லது.

    இந்த நேரத்தில் எந்தெந்த நட்சத்திரங்களுக்குத் தோஷம் உருவாகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். குளிக்கும் தண்ணீரில் கல்உப்பு ஒரு சிட்டிகை அளவு போட்டுக் குளிப்பது நல்லது. சூரிய கிரகணத்தால் உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதிருக்க கல் உப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். சூரிய கிரகணம் என்பதால் சூரியனுக்குரிய கோதுமையைத் தானம் கொடுப்பதோடு, ஒரு தாம்பாளத்தில் ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு கொஞ்சம் வைத்து, அத்துடன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு காணிக்கை வைத்து சூரியன் சன்னிதியில் தானம் கொடுத்து வழிபட்டு வருவது நற்பலன் தரும்.

    கடன் சுமையின் காரணமாக தடுமாறுபவர்கள் வாங்கிய கடனில் ஒரு சிறு தொகையை இந்த நேரத்தில் உரியவர்களிடம் கொடுத்தால் கடன் முழுவதும் தீர வழிபிறக்கும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க உகந்த நேரம் இதுவாகும். கிரகண காலத்தில் மன ஒருமைப்பாடும், நேர்மறைச் சிந்தனையும் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பொதுவாக இந்த கிரகண நேரம் வலிமையான நேரம் என்பதால் இல்லத்தில் இருந்து நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அதே நேரம் நுண்கிருமிகளின் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், கதிர்வீச்சின் தாக்கம் உடலில் ஏற்படாதிருக்கவும் உணவில் கட்டுப்பாடு செலுத்தி வீட்டிற்குள்ளேயே கிரகணம் முடியும் வரை இருப்பது நல்லது.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நடக்கிறது.
    • நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 8-ந் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    எனவே அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.

    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்று வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருப்பது வழக்கம். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள், தங்குவதற்கு கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு கிரிவீதி பழைய நாதஸ்வர கல்லூரி, மேற்கு கிரிவீதி மின்இழுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள சின்னக்குமாரர் விடுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×