search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closure of temples"

    • சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது.
    • சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன.

    கடலூர்:

    சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழு வதும் உள்ள கோவில்கள் இன்று மதியம் முதல் மாலை வரை கோவில்கள் சாற்றப்படுகிறது. மேலும் அனைத்து கோவில்களி லும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்து பின்பு திறக்கப்பட உள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1600 கோவில்கள் உள்ளன. இதில் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், புதுப்பா ளையம் ராஜகோபால சாமி கோவில், திருப்பா திரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில், திரு வதிகை விரட்டா னேஸ்வரர் கோவில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லை காளிய ம்மன் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன. இன்று மாலை சூரிய கிரகணம் உள்ளதால் அனைத்து கோவில்களிலும் இன்று மதியம் முதல் மாலை சூரிய கிரகணம் முடிந்து பின்பு பரிகார பூஜைகள் மற்றும் கோவில் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சாமி கும்பிட அனுமதிக்கப்படு கின்றனர். இது மட்டும் இன்றி இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியதை யொட்டி முருகர் கோவில்களில் இன்று முதல் சஷ்டி விழா கோலகலமாக தொடங்க ப்பட்டு உள்ளது. மேலும் சூரிய கிரகணம் முடிந்து சஷ்டி விழா அனைத்து முருகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை உடன் தொட ங்கி நடைபெற உள்ளது.

    இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதல் சூரிய கிரகணம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குறிப்பிட்ட நட்சத்தி ரம் மற்றும் ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்ய ப்பட வேண்டும் என தெரிவி க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்நேரத்தில் பொதுமக்கள் யாரும் உணவு உண்ணாமலும், வெறும் கண்களால் சூரியனை காணாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×