search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி"

    • நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியம்.
    • சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

    வனாடு அல்லது வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுகள், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

    இந்நிலையில், வனாடுவின் தெற்கே இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிடுகையில், "நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியமாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

    இருப்பினும், சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.

    பூகம்பங்கள், புயல் சேதம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக வனாடு உள்ளதாக உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

    நவம்பர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாரங்கனி, தெற்கு கோடாபாடோ மற்றும் டாவோ ஒக்சிடென்டல் மாகாணங்களில் இறப்புகள் பதிவாகின. அதே நேரத்தில் 13 பேர் காயமடைந்தனர். இது ஏராளமான மக்களை பீதிக்குள்ளாக்கியது மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது.

    • புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.
    • 5 உற்சவர்கள் உள்ளனர்

    இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கிய போது தமிழக கடலோர பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.

    பக்கத்து மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் கடல் தண்ணீர்பொங்கி வந்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மக்கள் சலனமின்றி இருந்தனர். புதுச்சேரியில் அன்று கடல் உள் வாங்கிச் சென்றதற்கு மணக்குள விநாயகரின் அருள்தான் காரணம் என்று புதுச்சேரி மக்கள் சொல்கிறார்கள்.

    சுனாமி பேரழிவில் இருந்து விநாயகர் தங்களை காப்பாற்றியதாக இன்றும் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    கேது கிரகத்துக்கு உரியவர்

    மணக்குள விநாயகர் கேது கிரகத்துக்கு உரியவர் ஆவார். கேது கிரக அமைப்பில் பிறந்த குழந்தைகளை இவரிடம் கொண்டு வந்து பிராத்தனை செய்வது வழக்கமாக உள்ளது. இப்படி பிரார்த்தனை செய்தால் அந்த குழந்தை நீண்ட ஆயுள் பெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    5 உற்சவர்கள்

    மணக்குள விநாயகர் ஆலயத்தில் இரு மூலவர்கள் இருப்பது போல 5 உற்சவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. மணக்குள விநாயகர்

    2. லட்சுமி கணபதி

    3. சித்தி-புத்தி விநாயகர்

    4. நர்த்தன விநாயகர்

    5. சக்தி விநாயகர்.

    இந்த 5 உற்சவர்களில் மணக்குள விநாயகர்தான் அதிக உற்சவங்களில் கலந்து கொள்வார். மற்ற 4 உற்சவர்களும் அவர்களுக்குரிய விழாக்கள் வரும் போது வீதி உலா சென்று வருவார்கள். ஆவணி பிரம்மோற்சவத்தின் போது 5-ம் நாள் திருக்கல்யாணம் நடத்தப்படும். அப்போது சித்தி-புத்தி விநாயகர் வீதி உலா செல்வார்.

    ஆவணி திருமஞ்சன நாளில் நர்த்தன விநாயகர் வீதி உலா செல்வார். தை, ஆடி, அமாவாசை நாட்களிலும், மாசி மகத்திலும் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். அதிலும் உற்சவர்கள் கலந்து கொள்வார்கள்.

    • வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
    • பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.

    கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    • நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது.

    தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது. நிலநடுக்கங்கள், புயல்கள், வெள்ளம், சுனாமி என அந்த நாடு அடிக்கடி இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடாக உள்ல்ளதாக உலக பேரிடர் அறிக்கையின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

    • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சுனாமி ஆழிப்பேரலை கடந்த 2004ம் ஆண்டு ஏற்படுத்திய பேரழிவை காலத்துக்கும் நம்மால் மறக்க முடியாது.

    அந்த அளவுக்கு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் திடீரென கடலுக்குள் ஏற்பட்ட சுனாமி கரையோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகள் அனைத்தையும் சுனாமி ஆழிப்பேரலை துவம்சம் செய்தது. தமிழகத்தில் மட்டும் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி தாக்குதல் ஏற்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலோரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் நினைவு அஞ்சலியை செலுத்தினார்கள்.

    ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் தற்போதும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மீண்டும் இதுபோல் எப்போதும் ஒரு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுதல்களாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சுனாமி எச்சரிக்கை சில நேரங்களில் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரிய அளவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்று பாதிப்பு எங்கேயும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் சென்னையையொட்டிய கடலோரப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவற்றின் ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.

    இந்த ஆய்வில் எந்தெந்த பகுதிகளில் மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம் கல்பாக்கம் பெரிய குப்பம் உள்ளிட்ட இடங்களில் 4 மீட்டர் வரையில் தண்ணீர் உட்புக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னையில் ராயபுரம், கடற்கரை ரெயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும், நேப்பியர் பாலம், அடையாறு பாலம் ஆகியவற்றை சுற்றி உள்ள பகுதிகளிலும் கடல்நீர் உள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோன்று இந்திய கடலோரப் பகுதிகளில் சுமார் 7500 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பல்வேறு நிலப்பரப்புகளை அடிப்படையில் எச்சரிக்கை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் 3 கிலோ மீட்டர் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது.

    அப்போது சென்னையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் விசாகப்பட்டினத்தில் ஒரு மீட்டர் தூரத்துக்கும் மட்டுமே தண்ணீர் புகுந்தது. கடலை ஒட்டிய நிலப்பரப்பு சம தளமாக இருந்தால் கடல்நீர் உள் புகுவது அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் கரையில் இருந்து சற்று உயரமான பகுதிகளில் கடல் நீர் புகுவது குறைவாகவே உள்ளது என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதியை பொருத்தவரையில் உத்தண்டி முதல் முட்டுக்காடு வரையிலும் பனையூர் பகுதியும் மீண்டும் சுனாமி ஏற்பட்டால் பாதிப்பை சந்திக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் ஊருக்குள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சலவன் குப்பம் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல் நீர் ஊருக்குள் வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடலின் இயற்பியல் அம்சங்களை ஆய்வு செய்து என்னென்ன பாதிப்புகள் எந்தெந்த பகுதியில் ஏற்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.

    கடலுக்கு அடியில் சில இடங்களில் சாய்வான பகுதிகள் இருந்தால் அங்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனாமி தாக்குதலை பொறுத்தவரையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அது ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    1881-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 2004-ம் ஆண்டு தான் மீண்டும் சுனாமி தாக்குதல் கடலோரப் பகுதிகளை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    எனவே மீண்டும் உடனடியாக ஒரு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற ஆறுதல் செய்தியையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே உடனடியாக சுனாமி வந்து விடுமோ என்று யாரும் பீதி அடைய தேவையில்லை.

    • கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    • கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னியாகுமரி:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலியான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தைகள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    • ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

    இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்து கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மௌன நிலையில் நின்று கண்ணீர் மல்க பால் குடத்தை கடலில் கரைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன
    • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி :

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்ட வத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலி யான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப் பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் இன்று (26-ந் தேதி) அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தை கள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்ப லியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தின் அருகில் உள்ள நினைவு ஸ்தூபியில் இன்று இரவு 7 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது.

    • சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது.

    இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலும் கடற்கரை ஓரங்களில் சுனாமி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றப்பட்டது.

    சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இதனால் கடலோர பகுதிகள் இன்று கண்ணீர் கடலாக காட்சி அளித்தது. உதிரி பூக்களை வாங்கி வந்து பலர் கடலில் தூவி மரியாதை செலுத்தினார்கள். மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஊர்வலமாக சென்று மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தி.மு.க. சார்பில் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் தாய் இளைய அருணா, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் லட்சுமணன், சுற்றுச்சூழல் அணி தீனயாளன், மாவட்ட தலைவர் வெற்றி வீரன், ஆர்.வி.கணேஷ் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை பகுதியான காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சார்பிலும் கடலோர பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நினைவு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.
    • ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்.

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

    பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.

    நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகும் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் தொடர்பாக பிரிட்டன் கடலியல் ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மர்மத்தினை உடைக்கும் விதமாக உள்ளது. #BermudaTriangle
    லண்டன்:

    பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.

    கடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த முக்கோணத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி  பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின்பு தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது. 

    கடைசியாக கடந்த ஆண்டு 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன.  அவை ஏன் காணாமல் போகின்றன? எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது. 

    பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.



    விஞ்ஞானிகள் ஒரு பக்கம் மண்டையை உடைத்து யோசித்து கொண்டிருந்தாலும், அங்கு மர்ம சக்தி உள்ளது அதனாலே, கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல் போகின்றன என கதை கட்டியவர்களும் உண்டு. அறிவியலுக்கு விஞ்சியது உலகில் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த கடலியலாளர்கள் இந்த மர்மத்தை உடைத்துள்ளனர். 

    டாக்டர் சைமன் போக்ஸால் என்பவரது தலைமையிலான குழு பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மற்ற கடல் பகுதிகளை விட மிகப்பெரிய அலைகள் எழுவதே கப்பல்கள் மூழ்குவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 100 அடி (30 மீட்டர்) உயர்த்துக்கு இயல்பாகவே அந்த பகுதியில் அலைகள் எழும்புகின்றன. 100 அடி உயரம் என்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த உயரத்தை எட்டும் வண்ணம் ராட்சச அலைகள் வெகு சாதாரணமாக முக்கோணப்பகுதியில் அடிக்கும். 

    மற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் இதே உயரத்தில் அலை அடிக்கிறது. இந்த அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் படகுகள் செல்வது சாத்தியமே இல்லை. இதனால், அங்கு செல்லும் அனைத்துமே மூழ்குகின்றது.

    கடந்த 1995-ம் ஆண்டு முக்கோண பகுதியில் அலைகள் 18.5 மீட்டர் அளவுக்கு வீசியது சேட்டிலைட்டில் பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. மற்ற கடல் பகுதியை விட இந்த பகுதியில் கடல் நீரில் உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பது படகுகள் மற்றும் கப்பல்கள் உடைவதற்கு காரணமாக உள்ளது.



    12 மீட்டர் உயரத்தில் வீசக்கூடிய அலைகள் 8.5 பிஎஸ்ஐ அழுத்தத்தை கொண்டிருக்கும். இதனால், 21 பிஎஸ்ஐ அழுத்தத்தை தாங்கும் விதமாக படகு மற்றும் கப்பல்கள் கட்டப்படுகின்றன. ஆனால், பெர்முடா முக்கோணப்பகுதியில் உள்ள கடல் அலையின் அழுத்தம் 140 பிஎஸ்ஐ அளவாகும்.

    சராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு உறுதியாக கப்பல் கட்டினாலும் பெர்முடா முக்கோணத்தில் உள்ள அழுத்ததை தாங்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் சரிவராத பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

    அலைகள் உயரமாக எழுவதற்கும் அழுத்தம் அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் இயல்பு காரணமாகவே மேற்கண்டவை நடக்கிறது. அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும், கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
    ×