search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கடத்தல்"

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.

    அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.

    அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

    இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.

    விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

    போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.

    தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார்.
    • திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன் (வயது 24). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ்(24), கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம் மகன் அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த கண்ணாலன் மகன் சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார்.

    அப்போது சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார். இதை அந்த பகுதி மக்கள் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர், இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வந்தனர். மேலும் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே 4 பேரும் சிறுமியை கடத்திக்கொண்டு கடலூர் எஸ்.பி. அலுவலக சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த காரை மடக்கி அதில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
    • ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த நடுவனேரியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28).

    இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் ேகார்ட்டில் நடைபெற்று வந்தது.

    ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர்.

    • கடந்த 2-ந்தேதி வேலைக்கு புறப்பட்டு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
    • மாயமான மகளை மீட்டு தருமாறு சிறுமியின் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போரூர்:

    மதுரவாயல், பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் 17 வயது மகள் 11-ம் வகுப்பு படித்துள்ளார். அவர் தேர்ச்சி பெறாததால் படிப்பை நிறுத்திவிட்டு கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்.

    அப்போது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஷாம் சுந்தர் (வயது22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வேலைக்கு புறப்பட்டு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான மகளை மீட்டு தருமாறு சிறுமியின் பெற்றோர் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் ஷாம் சுந்தர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷாம் சுந்தரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
    • மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.

    இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.

    அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
    • சிறுமியும், பிரகாசும் எர்ணாகுளம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். (வயது 55). இவர் கேரள அரசு போக்குவரத்து துறையில், பாறசாலை பகுதியில் மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

    மேலும் பேஸ்புக்கிலும் பலருடன் தொடர்பில் இருந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த சிறுமியுடன் அடிக்கடி பேச தொடங்கிய பிரகாஷ், பின்னர் அவரை சந்திக்கவும் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பிரகாஷ் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இதில் சிறுமியும், பிரகாசும் எர்ணாகுளம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

    போலீசார் அவர்களை கண்டுபிடித்தனர். பிரகாசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 14 வயது சிறுமியை 55 வயது அரசு ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது சிறுமிக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ேதாட்டத்தில் வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி வீட்டிற்கு வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமியை தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த டிரைவர் சிறுமியை சங்கம்பாளையத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்தியவரை கைது செய்தனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருேக உள்ள நல்லகண்டம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தோட்டத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அக்காவின் கணவர் சின்னத்தம்பி, தனது உறவினர் பொன்ராஜூக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரை காரில் கடத்தினார்.

    சின்னத்தம்பியுடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தனது மகளை காணாமல் தவித்த பெற்றோர் அவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்ததும் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் பாக்கியராஜ், வேல்முருகன் ஆகியோர் கொண்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்திய ஒருவரது செல்போன் சிக்னலை டிரேஸ் செய்து பார்த்ததில் அந்த கும்பல் கரூர் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்திய ராமசாமி என்பவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சிறுமியின் அக்கா கணவர் சின்னத்தம்பி, சிங்கம்பட்டியை சேர்ந்த கங்கேஸ்வரன் உள்பட மேலும் 4 பேைர தேடி வருகின்றனர்.

    • சிறுமி சினிமா டைரக்டர் ஜாசிக் அலி என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
    • மீட்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வடகரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமி அதே பகுதியை சேர்ந்த சினிமா டைரக்டர் ஜாசிக் அலி (வயது 36) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. மேலும் ஜாசிக் அலி, சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜாசிக் அலியின் செல்போன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை தேடினர். இதில் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் உடனே பெங்களூரு சென்று அவர்களை தேடினர். இதில் அவர்கள் இருவரும் ஒரு லாட்ஜில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டனர்.

    மேலும் சினிமா டைரக்டர் ஜாசிக் அலிக்கு உதவியதாக அவரது நண்பர் ஷம்னாராஜ் என்பவரையும் பிடித்தனர். இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் விசாரணைக்காக வடகரை போலீஸ்நிலையம் அழைத்து வந்தனர்.

    அங்கு விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.
    • சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.

    இதனை நம்பி அந்த சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அந்த சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகளை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்நகர மேடு பகுதியை சேர்ந்த ஜோதி மகன் சந்தோஸ் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.

    அப்போது அந்த சிறுமியை செய்யாறு பகுதிக்கு சந்தோஸ் கடத்தி சென்றது தெரியவந்தது.

    உடனே செய்யாறு பகுதிக்கு நேற்று விரைந்து சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பின்னர் சந்தோசை மத்தூருக்கு அழைத்து வந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் சந்தோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான அவரை கிருஷ்ணகிரி மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
    • பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதுர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை ஈரோடு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
    • அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பிரபு சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பிரபு (வயது 24). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் பிரபு இளம்பெண் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது அவருக்கு இளம்பெண்ணின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

    கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது பிரபு சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பிரபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பயன்படுத்திய செல்போன் டவரை போலீசார் கண்காணித்தனர்.

    அப்போது பிரபு கோவையில் சிறுமியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை வந்த ஆனைமலை போலீசார் சிறுமியுடன் தங்கி இருந்த பிரபுவை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் மனைவியின் தங்கையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×