search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி கடத்தல்"

    • சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா(வயது6) கடந்த 27-ந்தேதி மாலை, தனது சகோதரருடன டியூசனுக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டாள்.

    சிறுமியை கடத்திய கும்பல், சிறுமியின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ10லட்சம் கேட்டு மிரட்டியது. சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டனர். சிறுமியின் சகோதரன் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் கண்டறியப்பட்டது.

    சிறுமியின் சகோதரன் மற்றும் பலர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொல்லம் பகுதியில் தனியாக நின்ற சிறுமி சாராவை போலீசார் மீட்டனர்.

    அவளை கடத்தல்காரர்கள் அந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவளை கடத்தியவர்களை பிடிக்க போலீஸ் டிஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமியிடம் கடத்தல்காரர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.

    அப்போது சிறுமி கடத்தல்காரர்களில் ஒரு ஆண் மொட்டை மாமா என்று கூறினார். போலீசார் வரைந்த வரைபம், சிறுமி கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்த போது சிறுமியை கடத்தியது சாத்தனூரை சேர்ந்த பத்ம குமார்(52) என்பது தெரிய வந்தது.

    அவரை தேடி போலீசார் சென்றபோது அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்ட விவரம் தெரிந்தது. அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரையில் அவர்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அங்குள்ள ஒரு உணவகத்தில் வைத்து பத்மகுமார், அவரது மனைவி அனிதா, மகள் அனுபமா ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். பத்ம குமாரிடம் விசாரித்த போது, சிறுமியை கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

    சிறுமியின் தந்தையுடன் தனக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அதன் காரணமாகவே சிறுமியை கடத்தியதாகவும் தெரிவித்தார். பத்மகுமார் தனது மகளை நர்சிங் சேர்ப்பதற்காக ரெஜி ஜானிடம் ரூ5லட்சம் கொடுத்திருக்கிறார்.

    ஆனால் அவர் நர்சிங் சேர்க்கை வாங்கித் தரவில்லை. மேலும் அதற்காக வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை. அந்த பணத்தை திரும்பி வாங்குவதற்கு ஒரு ஆண்டாக ரெஜி ஜானிடம் கேட்டு வந்திருக்கிறார். ஆனால் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை.

    இதன்காரணமாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினை காரணமாகவே ரெஜி ஜானின் மகளை பத்மகுமார் கடத்தியது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர். சிறுமி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடத்தலில் தனது மனைவி மற்றும் மகளுக்கு தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் பத்மகுமார் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • சிறுமியை விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார்.
    • ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆயூர் பயப்பள்ளியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (வயது 6). கடந்த 27-ந்தேதி மாலை டியூசன் வகுப்புக்கு சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சிறுமியை விடுவிக்க கடத்தல் கும்பலினர் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசினர். போனில் பணம் கேட்டு மிரட்டியது பெண் என்பதால் போலீசார் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மறுநாள் கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள மைதானம் அருகே சிறுமி தனித்து நிற்பதாக தகவல் கிடைத்தது. அவரை மீட்ட போலீசார், சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை இங்கு ஒரு பெண் விட்டுச்சென்றதாகவும், உனது தந்தை வந்து விடுவார் என அவர் கூறிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க கேரள போலீஸ் டி.ஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி அபிகேல் சாராவிடம் விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 3 சந்தேக நபர்களின் ஓவியங்களை போலீசார் வெளியிட்டனர். அவர்களது நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் 94979 80211 என்ற எண்ணுக்கு தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக சிறுமி அபிகேல் சாராவின் தந்தை ரெஜியை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ரெஜி, பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். மேலும் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பத்தனம்திட்டா மாவட்ட பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

    எனவே செவிலியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் காரணமாக சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக ரெஜி கூறுகையில், போலீசார் என்னிடம் விசாரித்தனர். ஆனால் செல்போனை பறிமுதல் செய்யவில்லை. வீட்டில் குழந்தைகள் கேம் விளையாடுவதை தடுக்க வைத்திருந்த போனை அவர்கள் கைப்பற்றி உள்ளனர் என்றார்.

    • குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது
    • குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன் ஜோனதானுடன் டியூசன் வகுப்புக்கு சென்றபோது, நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியை விடுவிக்க ரூ.15 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் சிறுவன் ஜோனா தெரிவித்த அடையாளங்களை வைத்து கடத்தல் நபரின் படத்தை வரைந்து அதனை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த சூழலில் நேற்று மதியம் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் கடத்தப்பட்ட சிறுமி அபிகேல் சாரா ரெஜினா தனித்து நின்றார். இதனை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தான் கடத்தப்பட்ட அபிகேல் சாரா ரெஜினா என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    முன்னதாக போலீசார் அவரை விசாரித்தபோது, இரவில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் தன்னை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்ததாகவும், நேற்று பகல் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் தன்னுடன் வந்த பெண் இறக்கி விட்டதாகவும், அந்த பெண் மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி விட்டு வரும்போது சிறுமி தவிக்கும் நிலையை கண்டோம். அவள் சோர்வாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அப்போது அந்த பகுதியில் இருந்து மஞ்சள் சுடிதார் அணிந்து வெள்ளை சால்வையால் முகத்தை மூடிய ஒரு பெண் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    எனவே அவர் தான் சிறுமி அபிகேல் சாரா ரெஜினாவை அங்கு விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர் சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்ட ப்பட்டவர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடி வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், அவரது உறவுக்காரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சூழலில், கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 62 குழந்தைகள் மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர்களில் 43 பேர் சிறுவர்கள், 19 பேர் சிறுமிகள். குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவற்றை முடித்து வைக்க கோர்ட்டுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலீசார் இன்னும் சில வழக்குகளை கண்டுபிடிக்கவில்லை. ஓயூரை சேர்ந்த சிறுமி அபிகேல் சாரா ரெஜினா கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தியது போல் அனைத்து வழக்குகளிலும் போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.

    கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் ஆலப்புழாவில் 7 வயது சிறுவன் ராகுல் கிரிக்கெட் விளையாடியபோது கடத்தப்பட்டுள்ளான். இதனை தற்போது நினைவுகூர்ந்த அவனது தாயார் மினி ராஜூ, சிறுமி அபிகேல் சாரா ரெஜினா மீட்கப்பட்டது சந்தோஷம் தருகிறது. குறைந்தபட்சம் ஒரு தாயின் கண்ணீராவது துடைக்கப்பட்டிருப்பதில் நான் நிம்மதி அடைகிறேன். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அவன் விஷயத்தில், தற்போது செயல்பட்டதுபோல் அனைவரும் அர்ப்பணிப்பு காட்டியிருந்தால், ராகுலை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவனது வழக்கின் விசாரணை உள்ளூர் அளவிலேயே முடிந்து விட்டது என்றார். இருப்பினும் தன் மகன் உயிருடன் இருப்பார். ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    • டியூஷன் வகுப்புக்கு சென்ற சிறுமி சாராவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
    • சிறுமியின் தாயாருக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.10 லட்சம் தரும்படி மிரட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி. இந்தச் சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்து டியூஷன் வகுப்புக்கு நடந்து சென்றபோது, இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை காரில் கடத்திச் சென்றது.

    அதன்பின், சிறுமியின் தாயாருக்கு போன் செய்த அந்த கும்பல் சிறுமியை விடுவிக்க ரூ.10 லட்சம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளது. மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்த போலீசார், சிறுமி மருதனப்பள்ளி பகுதியில் வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.


    சிறுமியின் சகோதரன் மற்றும் போன் கொடுத்த கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரின் வரைபடத்தை போலீசார்வரைந்தனர். அந்த வரைபடம் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டள்ளது.

    இந்நிலையில், சுமார் 20 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். இன்று மதியம் கொல்லத்தில் உள்ள பொது மைதானத்தில் சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலீசார் விரைந்து சென்று தனியாக இருந்த சிறுமியை மீட்டனர். கடத்தல்காரர்கள் சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • வரைபடம் அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி. இவரது மனைவி சிஜி. இவர்களுக்கு ஜோனதன்(வயது9) என்ற மகனும், அபிகேல் சாரா(6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தினமும் மாலை பள்ளிக்கு சென்று வந்ததும், தங்களின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு டியூசனுக்கு செல்வார்கள். அதேபோல் நேற்று மாலை சிறுவனும், சிறுமியும் சென்றனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், சிறுமி சாராவை கடத்திச் சென்றது.

    அநத கும்பலிடம் சிக்காமல் சிறுவன் ஜோனதன் தப்பி வீட்டுக்கு ஓடிவந்து, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தான். சிறுமியை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்ற சம்பவம் குறித்து பூயப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சிறுமி கடத்தல் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர்.

    இந்நிலையில் சிறுமியின் தாய்க்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், உங்களின் மகள் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். அவரை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.5லட்சம் தரவேண்டும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    அந்த போனின் எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றனர். அப்போது அந்த போன், பாரப்பள்ளி குளமடையில் உள்ள கடைக்காரரின் போன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது ஆட்டோ ரிக்சாவில் வந்த இருவர், தங்களது போனை இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்பி தந்துவிட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் கடையில் இருந்து சற்று தூரமாகச்சென்று பேசியதால் யாரிடம் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என தெரிவித்தனர். கடத்தல்காரர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சம்பந்தம் இல்லாத கடைககாரர்களிடம் போனை வாங்கி பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    சிறுமியின் சகோதரனிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் கும்பலில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுமியை கடத்த பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது.

    ஆனால் அதில் போலி பதிவு எண்ணை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.


    இந்நிலையில் நேற்று இரவு மேலும் ஒரு போன் அழைப்பு கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுமியின் தாய்க்கு வந்தது. அப்போது சிறுமியை ஒப்படைக்க ரூ.10லட்சம் வேண்டும் என்றும், போலீசிடம் செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளனர். அப்போதும் அவர்கள் சம்பந்தம் இல்லாத ஒரு நபரிடம் போனை வாங்கி பேசியிருக்கிறார்கள்.

    கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் கடத்தல்காரர்கள் கேரளாவில் இருந்து தப்பிச்செல்ல வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கடத்தல்காரர்கள் பற்றி அவர்கள் போன் வாங்கிய பேசிய கடைக்காரர்கள் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தது தெரியவந்தது. சிறுமியின் சகோதரன் மற்றும் போன் கொடுத்த கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரின் வரைபடத்தை போலீசார் வரைந்தனர்.

    அந்த வரைபடம் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அதனை வைத்து கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. மேராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்க்கும் போது, சிறுமி சாராவை கடத்தல்காரர்கள் திட்டமிட்டு கடத்திச்சென்றது உறுதியாகி இருக்கிறது. பிணயத்தொகையை உயர்த்தியபடி இருப்பதால் பணத்துக்காகவே சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    சிறுமியின் தந்தை ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள மருத்துவமனையில் ஊழியராகவும், தாய் சிஜி கொட்டியத்தில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணிபுரிகின்றனர். அவர்களது குழந்தைகள் தினமும் மாலையில் டியூசனுக்கு தனியாக சென்று வருவதை நோட்டமிட்டு கடத்தல்காரர்கள் சிறுமியை கடத்தி சென்றிருக்கின்றனர்.

    சிறுவன் ஜோனதனையும் கடத்தவே கடத்தல்காரர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அவன் அவர்களது பிடியில் சிக்காதவாறு தள்ளி நின்றதால், அவன் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பியிருக்கிறான். சிறுமி கடத்தப்பட்டு வெகுநேரம் ஆவதால், அவரை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். பின்னர் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் நவீன் தனது மகளை கடத்தியதாக புகார் கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் நவீனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் பைப்லைன் அமைக்கும் பணிக்காக ஓமலூர் அருகே குதிரை குத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மோகன், பெருமாள் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் அருகில் இருந்த மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பந்தபட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானார்.

    இதுகுறிதது சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக பெருமாள் (25) என்பவர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
    • முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.

    மதுரை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டம் வெர்சோவா பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

    அங்கு இட்லி கடை வைத்து தொழில் செய்து வரும் இவரது கடையில் உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் மாணிக்கம் (வயது 30) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த 6-ந்தேதி பாக்கியராஜின் மகள் வீரலட்சுமி (16) பள்ளிக்குச் சென்றிருந்தார். அவரை யாருக்கும் தெரியாமல் மாணிக்கம் மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். பல்வேறு இடங்களில் பாக்கியராஜ் தனது மகளைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.

    ஆனால் அதே நேரத்தில் மாணிக்கமும் மாயமாகி இருந்தததால் சந்தேகத்தின் பேரில் தானே வெர்சோவா காவல் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் கிராமத்தில் பதுங்கியிருந்த மாணிக்கம் மற்றும் வீரலட்சுமி ஆகியோரை கண்டுபிடித்தனர்.

    மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.

    இதனை தொடர்ந்து அதிகாரியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாணிக்கம் கைது செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் பாக்கியராஜ் அளித்த புகார் மனு ஆகியவை கொண்டு அனுமதி வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சிறுமியை கடத்தி தப்பி வந்த மாணிக்கத்தால் மதுரை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் அனுமதி சான்று அளித்தவுடன் மும்பை போலீசார் பாக்யராஜ், வீரலட்சுமி மற்றும் சிறுமியை கடத்திய குற்றவாளி மாணிக்கம் ஆகியோர் மும்பைக்கு விமான மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • சிலம்பரசன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்றுவிடுவார். இதன்காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது மகளை பொம்மிடி அருகே பொ.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு மகன் சிலம்பரசன் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுமி உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.

    பெரியகுளம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார்.

    மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இந்நிலையில் சதீஸ்குமார் சிறுமியின் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் பேசி அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ரூ.70 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

    அவ்வாறு தர மறுத்தால் தாங்கள் 2 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஜாபர் அலி திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்டை மேட்டை சேர்ந்தவர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 19). இவர் திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9-ந்தேதி அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசாரிடம் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    அப்போது திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் சென்ற ஜாபர் அலியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மே ற்கொண்ட விசாரணையில் சிறுமியை ஜாபர் அலி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.

    நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.

    தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    ×