search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே உறவினருக்கு திருமணம் செய்ய சிறுமியை கடத்தியவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ராமசாமி, சின்னத்தம்பி.

    நத்தம் அருகே உறவினருக்கு திருமணம் செய்ய சிறுமியை கடத்தியவர் கைது

    • அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்தியவரை கைது செய்தனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருேக உள்ள நல்லகண்டம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தோட்டத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அக்காவின் கணவர் சின்னத்தம்பி, தனது உறவினர் பொன்ராஜூக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரை காரில் கடத்தினார்.

    சின்னத்தம்பியுடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தனது மகளை காணாமல் தவித்த பெற்றோர் அவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்ததும் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் பாக்கியராஜ், வேல்முருகன் ஆகியோர் கொண்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்திய ஒருவரது செல்போன் சிக்னலை டிரேஸ் செய்து பார்த்ததில் அந்த கும்பல் கரூர் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரை கடத்திய ராமசாமி என்பவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சிறுமியின் அக்கா கணவர் சின்னத்தம்பி, சிங்கம்பட்டியை சேர்ந்த கங்கேஸ்வரன் உள்பட மேலும் 4 பேைர தேடி வருகின்றனர்.

    Next Story
    ×