search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில் அருகே பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமி மாயம்- கடத்தப்பட்டாரா என விசாரணை
    X

    திருப்பதி கோவில் அருகே பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமி மாயம்- கடத்தப்பட்டாரா என விசாரணை

    • தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.

    நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.

    தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    Next Story
    ×