search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    சிறுமி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
    • ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த நடுவனேரியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28).

    இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் ேகார்ட்டில் நடைபெற்று வந்தது.

    ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×