என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidnapping of girls"

    • 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
    • ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த நடுவனேரியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28).

    இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் ேகார்ட்டில் நடைபெற்று வந்தது.

    ஆனால் விசாரணைக்கு 6 மாதங்களாக அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர்.

    • நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். பின்னர் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் நவீன் தனது மகளை கடத்தியதாக புகார் கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் நவீனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசுவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×