search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை நடமாட்டம்"

    • வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை பசு மாட்டை அடித்து கொன்றது.
    • வனப்பகுதியையொட்டி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரியபுரம் கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளனர்.

    இதே கிராமத்தை சேர்ந்த மாதேவம்மா என்பவர் தனது வீட்டின் பின்பகுதியில் மாடுகளை வளர்த்து வந்தார். இரவு நேரத்தில் மாட்டுத்தொழுவத்தில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் மாடுகளை மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை பசு மாட்டை அடித்து கொன்றது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு மாதேவம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை மாட்டை கொன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து பகுதி மக்கள் கூறும்போது,

    இரியபுரம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமம் என்பதால் கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. நேற்று இரவு கூட ஒரு பசு மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது.

    இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் வனப்பகுதியையொட்டி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
    • 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    வால்பாறை,

    வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

    தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
    • சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது.

    இந்தநிலையில் மஞ்சூர் அடுத்த எடக்காடு ஆடமனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை பார்த்த விவசாயிகள் சத்தம் போட்டு விரட்டினர். மேலும் சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதால், வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    • சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.
    • திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    திருமலை திருப்பதி முதலாவது மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தை அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடி விட்டது.

    திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அடிக்கடி வழி தவறி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலை பாதைக்கு வரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடைபாதையாக செல்லும் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைப்பாதையில் பைக்கில் திருமலைக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர்கள் 2 பேரை மலைப்பாதையில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.

    இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் மலை பாதைக்கு வராதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் மலைப்பாதையில் 31வது வளைவில் சிறுத்தை ஒன்று நடமாடிக்கொண்டு இருந்தது. இதனைக் கண்ட வாகனத்தில் வந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சிறுத்தை மீண்டும் வணப்பகுதிக்குள் சென்றது தெரிய வந்தது. மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகள் மலைப்பாதைக்கு வராதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.

    எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.

    இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-

    ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • காங்கயம் வனத்துறை ரேஞ்சர் தனபால் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதற்கான அறிகுறி தென்படவில்லை.
    • இளைஞர்கள் சிலர் தூங்காமல் வனத்துறையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெள்ளக்கோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தி பகுதி கரூா் மாவட்ட எல்லையாக உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கரூா் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாகவும், அது ஆடுகள், நாய்களை கடித்து குதறி வருவதாகவும் தகவல் பரவியது.

    இந்தநிலையில் வெள்ளக்கோவிலை அடுத்த குருக்கத்தி, இலுப்பைக்கிணறு, கல்லமடை, கெங்கநாயக்கன்வலசு, ஒத்தக்கடை, கே.வி. பழனிசாமி நகா், நாட்டராய சுவாமி கோவில் பகுதிகளில் சிறுத்தை சுற்றி திரிவதாகவும் அதை பாா்த்ததாகவும் தகவல்கள் பரவியதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் வேறு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி பரவி வருகிறது. இதுகுறித்து காங்கயம் வனத்துறை, வெள்ளக்கோவில் போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதிப்படுத்தப்படவில்லை. வதந்தியைப் புறந்தள்ளாமல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

    இந்நிலையில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குருக்கத்தி அருகில் உள்ள ஒரு நூற்பாலை கேமராவில் ஒரு மா்ம விலங்கு செல்வது பதிவாகி உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    காங்கயம் வனச்சரக அலுவலா் தனபால் தலைமையிலான குழுவினா் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் குருக்கத்தி, கள்ளமடை, ஒத்தக்கடை, நாட்டராய சுவாமி கோவில் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வெள்ளக்கோவில் பகுதியில் வந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் வனத்துறை ரேஞ்சர் தனபால் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதற்கான அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் சில கால்தடங்களை எடுத்துள்ளோம். அவை நாயா, சிறுத்தையா என்பது ஆய்வுக்கு பின் உறுதி செய்யப்படும். தொடர்ந்து இரவு முழுவதும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

    சிறுத்தை நடமாட்டம் பீதியால் வெள்ளக்கோவிலை அடுத்த குருக்கத்தி, இலுப்பைக்கிணறு உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்றிரவு முழுவதும் அச்சத்தில் தவித்தனர். இளைஞர்கள் சிலர் தூங்காமல் வனத்துறையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கிராம மக்கள் பீதி
    • வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது.அந்த நிலத்திற்கு 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7-30 மணி அளவில் தட்சிணாமூர்த்தியின் நாய் தொடர்ந்து குறைத்தபடி இருந்ததால் மாடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது பசுமாடு ஒன்றை சிறுத்தைகள் கடித்தபடி இருந்ததுள்ளன.

    அருகில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது சிறுத்தைகள் அந்த மாட்டை கடித்து குதறி கொண்டு இருந்தது. லைட் வெளிச்சம் கண்டதும் சிறுத்தைகள் தப்பி ஓடி உள்ளன. பயந்துபோன விவசாயி தட்சிணாமூர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இது குறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தெரிவித்து அனைவரும் சென்று பார்த்த போது அந்த பசு மாடு இறந்து விட்டிருந்தது.

    சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி பசுமாட்டை பரிசோதனை செய்தார்.

    உப்பிரப்பள்ளி கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளில் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    • பூனையை வாயில் கவ்விக்கொண்டு சாலையில் சுற்றி திரிந்தது.
    • இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. யானைகள் வீடுகளை அடித்து நொறுக்குவது, பொருட்களை சேதப்படுத்துவது என வாடிக்கையாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் சில தினங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    பின்னர் வெகுநேரம் அங்கு சுற்றி திரிந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்தது.

    அப்போது அங்கு வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு பூனையை அடித்து கொன்றது. பின்னர் அந்த பூனையை வாயில் கவ்விக்கொண்டு சாலையில் சுற்றி திரிந்தது.

    இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதில் 2 சிறுத்தைகள் சுற்றித்திரிவது பதிவாகி இருந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும். இங்கு சுற்றி திரியும் சிறுத்தையை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • வனசரக அலுவலர் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காமராஜர் அணை மேற்குபகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்து கொன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    இதுவரை மான், ஆடு, நாய் ஆகியவற்றை அடித்து கொன்று இழுத்துச்சென்றுள்ளதால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    இதனால் சிறுத்ைதயை விரட்டுவதற்காக இரவு நேரங்களில் வனத்துறையினர் வெடிபோட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை சார்பில் , மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின்பேரில் கன்னிவாடி வனசரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் அதேபகுதிைய சேர்ந்த வேல்முருகன் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    சில நாட்களாக இருந்துவரும் சிறுத்தைநடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.
    • இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள், யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பண்ணாரி வனப்பகுதியில் சாலையோரம் புள்ளிமான்கள் கூட்டம் அடிக்கடி உலா வருவது வழக்கம். அதனால் இரை தேடி சிறுத்தைகள் அவ்வப்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை பார்க்க முடியும்.

    தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பண்ணாரி சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மின்னல் வேகத்தில் ஓடியபடி சாலையை கடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் உள்ள மரக்கிளையில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உட்கார்ந்து இருந்தது.

    இந்த காட்சியை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த சிறுத்தை பின்னர் சாவகாசமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர் போலீசார் அச்சமடைந்துள்ளனர். சாலையில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×