search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பீதி"

    • குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
    • சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
    • 2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியல் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுத்தை கால் தடம் பதிவானதை கண்டு பிடித்தனர். இதையடுத்து சிறுத்தை தான் 11 ஆடுகளை கடித்து கொன்றது உறுதியானது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜன் தோட்டத்திற்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. அங்கு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்துள்ளது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. மீண்டும் சிறுத்தை வந்ததை கண்டு ராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை கடித்ததில் கன்று குட்டிக்கு காது கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருக்கும் வீடுகள் தனித்தனியாக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுகிறது.

    2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து கே2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேர்மாளம் வனத்துறையினர் அந்தப்பகுதியில் முகாமிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.

    • குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ள னர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்பட்ட புலி கால்தட ங்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. முக்காலேகர் பகுதி அதிக குடியிருப்புகளை கொண்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பிரச்சினைக்கு வனத்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிமாலி நகரில் இருந்து சில கி.மீ தொலைவில் புலி நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இங்கு உலாவி வரும் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர் மோட்டாரை ஆன் செய்தார்.
    • அதிகாரிகள் ஆய்வில் ஆழ்துளை கிணறு மொத்தம் 250 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

    திருமலை:

    ஆந்திர-மாநிலம், அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது.

    அதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர் மோட்டாரை ஆன் செய்தார். அப்போது, 30 அடி வரை தண்ணீரும், 10 அடி உயரத்திற்கு தீயை கக்கியது.

    இதுகுறித்து பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்த போது 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி கைவிடப்பட்ட கியாஸ் பைப் லைன் இருப்பதாகவும், இது பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள நிலையில் இதில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறினர்.

    அதிகாரிகள் ஆய்வில் ஆழ்துளை கிணறு மொத்தம் 250 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். மேலும் பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய கியாஸ் தீயை கக்கியது தெரியவந்தது.

    இதையடுத்து மண் ஆகியவற்றை நிரப்பி ஆழ்துளை கிணற்றை மூடினர். கிணற்றிலிருந்து தீ வந்ததால் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    ஜோஷிமத்:

    உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் கடந்த ஆண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ரோடுகளும் 2-ஆக பிளந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாழுவதற்கு தகுதியில்லாத 181 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பலர் அந்த முகாமிலேயே தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.அப்போது அங்குள்ள ஒரு தெருவில் திடீரென 6 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் சிக்கவில்லை.

    இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

    ரோட்டில் 6 அடி பள்ளம் உருவானதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    • வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

    தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லா புரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே ேபாலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
    • கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.

    மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக அடுக்கி வைத்துள்ளனர்.

    பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    மேலும் விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களும் பற்றி எரிந்தன. ஆனால் இவற்றிற்கு யாரும் தீ வைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.

    அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது.

    இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

    அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என திருப்பதி கலெக்டர் கூறினார்.

    இதுகுறித்து சந்திரகிரி செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி எம்.எல்.ஏ கூறுகையில், தீ விபத்துகளின் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். காரணம் விரைவில் தெரியவரும். அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம். ஆங்காங்கே எரியும் தீ பற்றி வரும் கட்டுக்கதைகள், வதந்திகளை நம்பாதீர்கள், அதற்கான காரணங்கள் விரைவில் தெரிய வரும், வேறு கிராமத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருப்போம்.

    மாவட்ட வருவாய் அலுவலர் கனக நரசா ரெட்டி, சுற்றுச்சூழல் பேராசிரியர் தாமோதர், தீயணைப்பு அலுவலர் ரமணய்யா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தீ விபத்து எரிவது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பீதி
    • வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை 4 வழிச் சாலை பணிகள் முடிந்து உள்ளது.

    இதனால் காவல்கிணறில் இருந்து நாகர்கோவில் வரும் பல கனரக வாகனங்கள் அனைத்தும் தற்போது இந்த வழியாகவே வருகிறது.

    அதிக பாரம் ஏற்றியபடி வரும் இந்த வாகனங்கள் சாலையில் அதிவேகமாக செல்கிறது. இவ்வாறு செல்லும் போது அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதற்கிடையே இந்த 4 வழிச்சாலையை பயன்படுத்தும் கார், வேன் மற்றும் பஸ்கள் வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    இதுபோல ஆரல்வாய் மொழி, குமாரபுரம் சாலை யிலும், திருப்பதிசாரம், வெள்ளமடம் சாலை வழியாகவும் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

    இவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதோடு, இணைப்பு சாலைகளில் திரும்பும் போது அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுகிறது.

    இதுபோல வெள்ள மடம்-குலசேகரன்புதூர் ரோட்டில் 4 வழிச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை செங்குத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாககனங்களும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கிறது.

    இப்படி விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளுக்கு செல் வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சாைலையில் விபத் துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சாலை போக்கு வரத்து துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
    • காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

     காங்கயம்:

    காங்கயம் நகரம், மூர்த்திரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி பாலாமணி (வயது 44). இந்தநிலையில் பாலாமணி நேற்று முன்தினம் மதியம் காடையூர் - கல்லாங்காட்டு புதூர் செல்லும் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலாமணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.

    பின்னர், பாலாமணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்கள். இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.

    அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காங்கயம் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே ஊடையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நாய் ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனது. இந்த நிலையில் ஊடையம் கிராமத்திற்கு சிறுத்தை ஒன்று வந்து காணாமல் போன நாயை கொன்று தின்று விட்டதாகவும், சிறுத்தையை ஈரோடு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி, கொளந்தபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாகவும், தொிவித்தார்.

    எனவே வேலம்பாளையம், முத்தூர், அஞ்சூர், கார்வழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறுத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று வெளியானது.

    இதனால் ஊடையம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் கோட்டம் மற்றும் காங்கயம் துணை கோட்ட வனத்துறை அதிகாரிகள், கொடுமுடி தீயணைப்பு துறை அதிகாரிகள் குழுவினர் ஊடையம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊடையம் கிராம பகுதிகளில் கரும்புத்தோட்டம், வண்டி தடம் பாதை, மண் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாடி, உலாவியதற்கான அறிகுறி ஏதாவது கிடைக்கிறதா என்றும், சிறுத்தையின் கால் தடம் ஏதாவது பதிந்து உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் ஊடையம் சுற்றுவட்டார கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் வனத்துறை அதிகாரிகள் குழுவினர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஊடையம் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்களிடம் கூறியதாவது:-

    ஊடையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் மற்றும் எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் கிராம பொதுமக்கள் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து கிராம பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வீண் வதந்திகளை உண்மை என நம்பி பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. இருப்பினும் இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் பகல், இரவு நேரங்களில் எச்சரிக்கையாகவும், மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×