search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காமிராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு
    X

    வனத்துறையினர் காமிராக்கள் பொருத்திவரும் காட்சியும், பதிவான சிறுத்தையின் கால்தடத்தையும் படத்தில் காணலாம்.

    ஆத்தூர் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காமிராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு

    • ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • வனசரக அலுவலர் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காமராஜர் அணை மேற்குபகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்து கொன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    இதுவரை மான், ஆடு, நாய் ஆகியவற்றை அடித்து கொன்று இழுத்துச்சென்றுள்ளதால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    இதனால் சிறுத்ைதயை விரட்டுவதற்காக இரவு நேரங்களில் வனத்துறையினர் வெடிபோட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை சார்பில் , மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின்பேரில் கன்னிவாடி வனசரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் அதேபகுதிைய சேர்ந்த வேல்முருகன் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    சில நாட்களாக இருந்துவரும் சிறுத்தைநடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×