என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
- புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
- சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது.
இந்தநிலையில் மஞ்சூர் அடுத்த எடக்காடு ஆடமனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை பார்த்த விவசாயிகள் சத்தம் போட்டு விரட்டினர். மேலும் சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதால், வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
Next Story






