பசுமாட்டை அடித்து கொன்ற சிறுத்தை

கிராம மக்கள் பீதி வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
பசுமாட்டை அடித்து கொன்ற சிறுத்தை
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது.அந்த நிலத்திற்கு 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7-30 மணி அளவில் தட்சிணாமூர்த்தியின் நாய் தொடர்ந்து குறைத்தபடி இருந்ததால் மாடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது பசுமாடு ஒன்றை சிறுத்தைகள் கடித்தபடி இருந்ததுள்ளன.

அருகில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது சிறுத்தைகள் அந்த மாட்டை கடித்து குதறி கொண்டு இருந்தது. லைட் வெளிச்சம் கண்டதும் சிறுத்தைகள் தப்பி ஓடி உள்ளன. பயந்துபோன விவசாயி தட்சிணாமூர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார்.

இது குறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தெரிவித்து அனைவரும் சென்று பார்த்த போது அந்த பசு மாடு இறந்து விட்டிருந்தது.

சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி பசுமாட்டை பரிசோதனை செய்தார்.

உப்பிரப்பள்ளி கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளில் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com