search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது.

    இதை அடுத்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தென்னிந்தியாவுக்கு 36 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
    • ரெயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பயணிகளின் நெரிசலை தடுக்க சம்பல்பூர் (ஒடிசா) -ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ெரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ெரயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.ெரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை காலை 10:55 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 7:50 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றடையும். ெரயில் எண்: 08312 ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். ெரயில் எண்: (08311) சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் வியாழன் அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6:42 மணிக்கு வந்து 6:45க்கு புறப்படும். ெரயில் எண் (08312) ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் வெள்ளி அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2:47 மணிக்கு வந்து 2:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து பிலாஸ்பூர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு நெல்லை பணிமனையில் 3 நாட்கள் ரெயில் காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு(வண்டி எண்: 22620) வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    பிலாஸ்பூர் ரெயில்

    இந்த ரெயிலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து திங்கட்கிழமை இரவில் பிலாஸ்பூருக்கு சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

    மறுமார்க்கமாக இந்த ரெயிலானது (வண்டி எண்: 22619) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பிலாஸ்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு அதே வழித்தடங்களின் வழியாக வியாழக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு நெல்லைக்கு வந்தடைகிறது. இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 9 படுக்கை வசதி பெட்டிகளும், 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் மற்றும் மேலாளர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்

    இதில் படுக்கை வசதி பெட்டியில் மொத்தம் 720 இருக்கைகள் உள்ளன. அதேபோல் 4 முன்பதிவு இல்லாத பெட்டியில் சுமார் 500 பேர் வரை பயணிக்கலாம். மூன்றடுக்கு ஏசி பட்டியில் மொத்தம் 360 பேர் வரை பயணிக்கலாம். 2 அடுக்கு ஏசி பெட்டியில் 52 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் இந்த ெரயிலில் சுமார் 1,500 பேருக்கும் மேலானவர்கள் இதில் பயணம் செய்ய முடியும்.

    இந்த ரெயில் சேவையானது வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெல்லை பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த காலி ரெயில் பெட்டிகளை கொண்டு தான் கடந்த மாதம் வரை நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நேற்று முன்தினம் முதல் மேட்டுப்பாளையம் ரெயில் சேவை வியாழக்கிழமை புறப்படுவதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்கிறது.

    காலி பெட்டிகள்

    இதன் காரணமாக இந்த வாரத்தில் இருந்து இந்த ெரயிலானது 3 நாட்கள் காலியாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும், தென்காசி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருக்கு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் செல்லுமாறும், மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த ெரயில் சேவையை இயக்கலாம்.

    மேலும் சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயிலை 3 மாதங்களுக்கு இயக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இந்த சேவைகளை இயக்க வலியுறுத்த வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
    • திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (28-ந்தேதி) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 29-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (எண்:07581/07660) ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில்கள் (எண்:16057, 06753) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரெயில்கள் (எண்:16054, 06728) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    மேலும் கோவை-திருப்பதி அதிவிரைவு ரெயில் (எண்:22616/22615) 29-ந்தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரெயில் (எண்:16854/ 16853) ஜூன் நேற்று முதல் ஜூலை 2-ந்தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

    அதே தேதிகளில் இந்த ரெயில்கள் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும். தாம்பரம், சாந்த்ராகாச்சி அந்தியோதயா விரைவு ரெயில் (எண்:22842), பெங்களூரு- ஹவுரா குளிர்சாதன அதிவிரைவு ரெயில் (எண்:22864) நாளை (புதன் கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    திருப்பூர்,ஏப்.3-

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ெரயில்(வண்டி எண்: 06044) வருகிற 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ெரயில் (வண்டி எண்: 06043) வருகிற 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.இந்த ெரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ெரயில் (வண்டி எண்: 06046) வருகிற 9 மற்றும் 16-ந் தேதி, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் ெரயில் (வண்டி எண்: 06045) வருகிற 10 மற்றும் 17ந்தேதி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர்.
    • ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    சென்னை:

    புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடார் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் ரெயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

    கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அப்போது ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    இதை கருத்தில் கொண்டு கோடைகால விடுமுறையின் போது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரெயில்களை தினமும் இயக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டத்தினை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

    மேலும் நிலுவையில் உள்ள நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியரசு தின விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.

    மதுரை

    குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம் -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி -ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06054) வருகிற 29 -ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.

    தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26 -ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) திருநெல்வேலியில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.

    • சிறப்பு ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நெல்லை:

    குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென்மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (06054) வருகிற 29-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    தாம்பரம் -நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

    இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் சிறப்பு ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழித்தட மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.
    • சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்பட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

    தென்காசி:

    தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சிறப்பு ரெயில்களில் மக்கள் மிகவும் ஆர்வமாக பயணிக்கின்றனர்.

    இந்த ரெயில் பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் சிறப்பு ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழித்தட மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கடையத்தில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு கணிசமான பயணிகள் பயணித்தனர்.

    இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்பட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரெயில்கள் மூலமாக 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் தென்னக ரெயில்வேக்கு கிடைத்துள்ளது.

    எனவே வருமானம் கொழிக்கும் நெல்லை-தாம்பரம், நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயிலாக இயக்கும் வரை சிறப்பு ரெயில்களாக தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலும் நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் 2 ரெயில்களை பயன்படுத்தி இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால் தென்னக ரெயில்வேக்கு இந்த சிறப்பு ரெயில்களை நீட்டிப்பது எளிது.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பண்டிகை விடுமுறைகளை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் தென்காசி வழியாக தாம்பரத்திற்கும், வியாழக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்துக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இரு மார்க்கங்களிலும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு இந்த தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் இரு சிறப்பு ரெயில்கள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதால் நிரந்தரமாக்க வேண்டும்.

    மேலும் மதுரை ரெயில்வே கோட்டத்தில் சென்னைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை, பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
    • முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

    உடுமலை :

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு இந்த ஆண்டாவது சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும், ரெயில் வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. ஆனால் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரெயில்கள் குறைக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை- - பொள்ளாச்சி, கோவை- - மதுரை பயணிகள் ரெயில்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க மறுப்பதுடன் பண்டிகை காலங்களில் கூட, தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வருவதில்லை.

    கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும், சென்னையில் வசிக்கும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு ரெயில்கள் இயக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த ஆண்டாவது வருகிற 11ந் தேதி முதல் 14ந் தேதி வரையும், திரும்பி வருவோர் வசதிக்காக, 18ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும் பொள்ளாச்சி வழித்தடத்தில், கோவை - ராமேஸ்வரம் மற்றும் கோவை -தாம்பரம் இடையே 2 சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணியர் நலச்சங்கத்தினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.அதன்படி எர்ணாகுளம் -சென்னை இடையே ஜனவரி 12ந் தேதி திருப்பூர் மார்க்கமாக இயங்கும் வகையில் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவு துவங்கினாலும், தங்களுக்கான டிக்கெட் உறுதி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.அதாவது திருப்பூர், உடுமலையில் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர் வந்து டிக்கெட் பெற முயல்வோர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே அதிகமானோர் சொந்த ஊர் செல்வர். அதற்கு நிகராக பொங்கலுக்கு சொந்த ஊர் பயணிப்பதில்லை.அவ்வாறு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தாலும், கடைசி நேரம் ஏதேனும் ஒரு ரெயில் பொது பெட்டியில் பயணித்துக்கொள்கின்றனர். முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) கேரளாவின் கொச்சுவேலிக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

    மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×