என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள்"

    • தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06003), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் சிறப்பு ரெயில் (06004), மறுநாள் காலை 11.30 மணிக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை - பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
    • காலை 6.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 8.30 மணிக்கு பழனி வந்தடையும்.

    பிப்ரவரி 1 அன்று பழனியில் தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு - பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும்.

    மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.

    இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
    • ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவும் இன்று காலை தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * நாகர்கோவிலில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    * கன்னியாகுமரியில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06053), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * நெல்லையில் இருந்து வருகிற 9, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06156), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 9,16 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06155), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * நெல்லையில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06158), அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து வருகிற 10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * கோவையில் இருந்து வருகிற 11,18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06034), மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 12,19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் சிறப்பு ரெயில் (06033), மறுநாள் காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.

    * போத்தனூரில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் காலை 10.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்டிரலில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), அதேநாள் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

    * நெல்லையில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), அதேநாள் இரவு 11.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13,20 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06106), மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 14,21 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரெயில் (06105), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

    இவை உள்பட மொத்தம் 10 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.

    • ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
    • சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்

    செங்கல்பட்டில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும். தென்காசியில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கல்பட்டு வந்தடையும்

    சென்னையில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்

    பொத்தனூரில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.

    சென்னையில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.

    சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மங்களூரு சென்றடையும்.

    சென்னையில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் கோவை சென்றடையும். கோவையில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்

    சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் போத்தனூர் சென்றடையும். போத்தனூரில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
    • விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்

    விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்

    விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்

    தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

    • சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
    • இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

    சென்னை:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

    பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அவர்கள் கூறியதாவது:-

    தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

    பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை பொருத்து 40 பஸ்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக 24 தற்காலிக பஸ் நிலையங்களும், 130 கார் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக போலீஸ் உதவி மையங்கள், குடிநீர், மின்விளக்கு வசதிகள் மற்றும் தகவல் பலகைகள் ஏற்பாடு செய்யப்படும்.

    கார்த்திகை தீபத்தன்று மழை பெய்தால் தேங்கி நீங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு தனியார் கல்லூரிகளின் 220 பஸ்கள் இலவசமாக இயக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரூ.10 சலுகை விலையில் 90 மினி பஸ்கள் இயக்கப்படும். கார் நிறுத்தும் இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும்.

    திருவண்ணாமலைக்கு ஏற்கனவே 16 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீபத்தன்று மேலும் 16 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 25 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் ரூ.60 வசூலிக்கப்படலாம். அதிகப்படியான கட்டண வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் 90 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். கோவிலுக்குள் 7 மருத்துவ குழுக்கள் 45 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 5 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2 விருந்தினர் இல்லங்கள் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். மேலும் தேவையான உபகரணங்களுடன் கூடிய மருத்துவர் குழுவும் இருக்கும். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
    • சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 16-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06111), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06114), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06120), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06127), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 23-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06117), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06118), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.
    • மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளியை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு ரெயில், முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை அக்டோபர் 17ம் தேதி இரவு 7.30 மணிக்கு பறப்படும் ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அக்டோபர் 20ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மேலும், அக்டோபர் 17, 18-ல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அக்டோபர் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கும், 21ம் தேதி இரவு 8.30 மணிக்கும் மெமு ரெயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
    • 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.

    அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.

    இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
    • தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையோடு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நேற்று முன்தினம் இதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முக்கிய ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

    இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது.

    முன்பு போல காத்திருப்போர் பட்டியலில் 400 டிக்கெட் தற்போது கொடுப்பதில்லை. அதிகபட்சமாக 250 டிக்கெட் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பயணம் உறுதியான டிக்கெட் மட்டுமே பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களிலும் இடமில்லை. இதேபோல கோவை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் முடிந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக பயணம் செய்யக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் விடுவது வழக்கம். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு வெளியாகும். இது பகல் மற்றும் இரவு நேர பயணம் செய்யக்கூடிய வகையில் இயக்கப்படும்.

    தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    இதற்கிடையில் எந்தெந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க சாத்தியப்படுமோ அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும்.

    எனவே தீபாவளி பயண கூட்ட நெரிசலை குறைக்க எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் தேவைப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×