என் மலர்
நீங்கள் தேடியது "Diwali Special Train"
- தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.
- மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு ரெயில், முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை அக்டோபர் 17ம் தேதி இரவு 7.30 மணிக்கு பறப்படும் ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அக்டோபர் 20ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 17, 18-ல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அக்டோபர் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கும், 21ம் தேதி இரவு 8.30 மணிக்கும் மெமு ரெயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டம், பொள்ளாச்சி ெரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
- அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் முருகன் கோவில், கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் உள்ளன.
உடுமலை:
பொள்ளாச்சி ெரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ெரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர். வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், மூணாறு, அமராவதி, ஆழியார் அணைகள் போன்ற சுற்றுலா பகுதிகளும், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில் போன்ற, ஆன்மிக தலங்கள் உள்ளன. அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் முருகன் கோவில், கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் உள்ளன.
புதுச்சேரியின் திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களில் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், வேளாங்கண்ணி, தேவாலயம் போன்ற பல்வேறு யாத்திரை மையங்கள் உள்ளன.
இந்நிலையில் பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை,பொள்ளாச்சி, சென்னை - தாம்பரம், எழும்பூர் இடையே நேரடி ெரயில் சேவை இல்லை. எனவே, பொள்ளாச்சி - தாம்பரம் அல்லது சென்னை எழும்பூர் (பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக) தினசரி இரவு நேர ெரயிலை இயக்க வேண்டும்.நவம்பரில், தீபாவளி சிறப்பு ெரயிலாக இந்த ெரயிலை இயக்க வேண்டும். இருமார்க்கத்தில் இருந்தும் இரவு 8 மணிக்கு ெரயில் புறப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கம்.
- சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கடந்த 30ம் தேதி சென்னையில் இருந்து மூன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதன்மூலம், சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை முடிவுப் பெறும் நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை (நவ.03) மதுரை மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 7.15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்தும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.






