மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கம்.சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்.
மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்
Published on

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கடந்த 30ம் தேதி சென்னையில் இருந்து மூன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதன்மூலம், சென்னையில் இருந்து பேருந்துகள், ரெயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை முடிவுப் பெறும் நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை (நவ.03) மதுரை மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 7.15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்தும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com