என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compartment"

    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    • மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெருங்குடி, திருமங்கலம், காரியாபட்டி, வலையங்குளம், மண்டேலாநகர், பர்மா காலனி, மீனாட்சிபுரம், அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பஸ்கள் என 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அவனியாபுரம் வந்து செல்கிறது.

    அவனியாபுரத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என இந்த பகுதியில் இருந்து அதிக பஸ்கள் செல்கின்றன. இவைகளில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிர–த்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய அவனியாபுரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    இவர்கள் பயன்பெறும் வகையில் 2 நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஒரு நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிழற்குடையை சீரமைக்காமல் கம்பு வைத்தும், கயிறுகளாலும் தடுத்துள்ளனர்.

    மற்றொரு நிழற்குடை இலைக்கடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமர இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக முதியோர்கள் மாதாந்திர மாத்திரை வாங்க வருவதுண்டு. அவ்வாறு வரும் முதியோர்கள் அதிக தூரம் நடக்க முடியாமல் இந்த நிழற்குடையில் அமர்ந்து செல்வதுண்டு. ஆபத்தான நிலையில் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை இருப்பது முதியோர்களை அச்சப்பட வைக்கிறது.

    விரைவில் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×