என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்
    X

    தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்

    • தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை, தாம்பரம்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்த வருகிற 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06003), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் சிறப்பு ரெயில் (06004), மறுநாள் காலை 11.30 மணிக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×