search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பல்பூர்  -ஈரோடு சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு
    X

    கோப்புபடம். 

    சம்பல்பூர் -ஈரோடு சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு

    • ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
    • ரெயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பயணிகளின் நெரிசலை தடுக்க சம்பல்பூர் (ஒடிசா) -ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ெரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ெரயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.ெரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை காலை 10:55 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 7:50 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றடையும். ெரயில் எண்: 08312 ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். ெரயில் எண்: (08311) சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் வியாழன் அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6:42 மணிக்கு வந்து 6:45க்கு புறப்படும். ெரயில் எண் (08312) ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் வெள்ளி அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2:47 மணிக்கு வந்து 2:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×