search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்துகள்"

    • இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை :

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நேற்று முதல் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 651 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நள்ளிரவு வரை 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி வரையில் இயக்கப்பட்ட 2,686 பஸ்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களில் 20 ஆயிரம் பேரும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று வெளியூர் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் 1,855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களையும் சேர்த்து மொத்தம் 4000 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.

    அரசு பஸ்கள் மூலம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இன்று பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    இதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து பெரும்பாலானவர்கள் இன்று இரவு வெளியூர் பயணத்தை மேற்கொள்வதால் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரித்தது. பகல் நேர பயணத்தை மேற்கொண்டனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    நேற்று ஒரேநாளில் 1½ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது இன்று 2 லட்சத்தை தாண்டும். வழக்கமாக பொங்கல் பண்டிகை நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு காரணம் முன்பதிவில் அதிகளவில் அரசு பஸ்கள் சேர்க்கப்பட்டது தான். நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.

    இன்று பயணம் செய்ய 45 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பஸ்கள் இயக்கப்படும்.

    பிற போக்குவரத்து கழக பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில் மேலும் தேவைப்பட்டால் சென்னை மாநகர பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.
    • அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும். சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறை இல்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதோ அதே போல் பொங்கல் பண்டிகைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தீபாவளி பண்டிகையின் போது சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிக கட்டணம் வசூலித்த 4 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டியின் போது உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க,செல்வராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார்,திருப்பூர் மாநகர தி.மு.க. தெற்கு செயலாளர் டி.கே.டி.நாகராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலுசாமி(கிழக்கு), அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
    • பொங்கல் முடிந்து திரும்புவதற்காக மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.
    • நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 6 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். பஸ் இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டதால் பிரச்சினை எதுவும் உருவாகவில்லை.

    இதே போல பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது. நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நேற்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,513 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை வந்து சேர்ந்தனர். இன்று 3 ஆயிரம் அரசு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    இதன் மூலம் 1½ லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். தொடர்ந்து நாளை மற்றும் இந்த வாரம் முழுவதும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் 28, 30-ந்தேதிகள் முகூர்த்த நாளாக இருப்பதால் பஸ் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஓசூர், திருப்பத்தூர், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பகல் நேர பயணம் மேற்கொண்டு சென்னைக்கு இரவுக்குள் வந்து சேருகின்றனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பஸ்களில் இருக்கைகள் காலியாக உள்ள நிலையில் வெளியூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரக்கூடிய பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர்.
    • இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். கடந்த வாரம் 20-ந்தேதி முதல் வெளியூர் பயணத்தை தொடங்கினார்கள்.

    சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பஸ்கள் வழியாக 1½ லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர். இதுதவிர ரெயில்கள் மூலம் 12 லட்சம் பேர் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.

    மேலும் கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணமாகி உள்ளனர். கடந்த 2 வருடமாக முடங்கி கிடந்த மக்கள் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் சென்றனர். சிறப்பு ரெயில், பஸ் போன்றவற்றில் சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர். இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    இதனால் சிறப்பு ரெயில், பஸ்கள் மூலம் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கோயம்பேடு பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நாளை திறக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

    பகல்நேரம் மற்றும் இரவு நேர பயணத்தை மேற்கொண்டு பணிகளை தொடர திட்டமிட்டு பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்கிறார்கள். அதன் அடிப்படையில் வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,678 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,778 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை (26-ந்தேதி) 2,954 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சென்னைக்கு விடப்பட்டுள்ளது.

    இன்று பயணம் செய்வதற்காக 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கூலி வேலை, தனியார் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடியவர்கள் தங்களது பணியை இன்று முதல் தொடர்கின்றனர். அதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் விடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் நாளையும் சென்னை திரும்புவார்கள் என்ற அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து செயல்படுகின்றனர். ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி உள்ளன.

    சென்னை தவிர பிற நகரங்களும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 3,790 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

    • அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    அரியலூர்,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூ இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களிலும்,

    மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரையும்,

    அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து எங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்,

    கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் மேலும் அரியலூர் மாவட்த்தில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து வருகின்ற 20.10.2022 முதல் 31.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்கப்பட உள்ளது.

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட்., திருச்சி மண்டலத்தின் மூலம் பயணிகள் இலகுவாக பயணம் செய்திட அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து வருகின்ற 20.10.2022 முதல் 31.10.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா, மீனா திரையரங்கம் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும் புறப்படும் வண்ணம் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பட உள்ளது. சோனா, மீனா திரையரங்கம் மற்றும் மன்னார்புரம் ரவுண்டானா தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இரவு, பகல் அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    திருச்சி மண்டல இயக்க பகுதிகளான லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், நாளை (21.10.2022) முதல் 23.10.2022 வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம்-சென்னை 150 சிறப்பு பேருந்துகளும், அரியலூர், ஜெயங்கொண்டம்-சென்னை 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர், பெரம்பலூர், –சென்னை 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம்-மதுரை 50 சிறப்பு பேருந்துகளும்,

    திருச்சி மத்திய பேருந்து நிலையம்-கோவை 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம்-திருப்பூர் 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம்-திண்டுக்கல், பழனி 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம்-தஞ்சாவூர் 50 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அரியலூர், ஜெயங்கொண்டம் 50 சிறப்பு பேருந்துகளும்,

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்-பெரம்பலூர் 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்-துறையூர் 25 சிறப்பு பேருந்துகளும், என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேசன் சிஸ்டம் மூலம், முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் குழந்தைகளையும், உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

    பூந்தமல்லி:

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதற்கான பயண முன்பதிவும் கடந்த வாரமே தொடங்கியது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், செய்யாறு, தர்மபுரி, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி, பெங்களூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்கனவே பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து வாகனங்களும் பூந்தமல்லி பைபாஸ் சாலை மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான அறிவிப்பு, முறையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பயணிகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    இந்த தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் போதிய நிழற்குடைகள், இருக்கைகள், கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் திறந்த வெளியிலும் வெயில் மற்றும் மழையில் நின்று பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து பயணிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிழற்குடை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர போக்குவரத்து துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
    • பயணிகள் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ளும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னையின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்.

    இவ்வாகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சுமார் 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். #Diwali #TNSTC #SETC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். 

    நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
    ×