search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்

    • அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    அரியலூர்,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூ இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களிலும்,

    மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரையும்,

    அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து எங்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்,

    கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24.10.2022, 25.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    21.10.2022, 22.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் மேலும் அரியலூர் மாவட்த்தில் அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் நடை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×