search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை வசதி"

    • மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
    • மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.

    இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர்.

    திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
    • அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    பாம்பு கடித்து பலியான குழந்தை தனுஷ்காவின் தாய் கூறியதாவது:-

    என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

    அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    அல்லேரி மலை பஞ்சாயத்து மக்கள் நீண்ட காலமாக அடிப்படை சாலை மற்றும் சுகாதார வசதிகளை கோரி வந்தனர். "சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகளுக்காக நாங்கள் பலமுறை கெஞ்சினோம், ஆனால் எங்கள் பலன்கள் வீணாகிவிட்டன." என்றார்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம், ஆனால் பணிகளை தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார துணை மையத்தை ஏற்பாடு செய்வோம் என்றார்.

    • இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா.

    இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

    அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
    • பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தின் மாடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி (திமுக) :

    ருத்திரசிந்தாமணி ஊராட்சியில் பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும். நீர் தேக்க தொட்டி, சமையல் கூடம் பழுது நீக்கி தர வேண்டும்.

    பாமா செந்தில்நாதன் (திமுக) :

    சாந்தாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும்.சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    சிவ.மதிவாணன் (அதிமுக) :

    கொள்ளுக்காடு ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    மீனவராஜன் (அதிமுக):

    மல்லிப்பட்டினத்தில் ராமர் கோயில் முதல் முஸ்லிம் தெரு வரை சாலை வசதி செய்து தர வேண்டும்.

    சாகுல் ஹமீது (திமுக) :

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் கஜா புயலில் சேதமடைந்த முத்தரையர் சுடுகாடு சீரமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

    கூட்டத்தில் செய்யது முகமது, சுதாகர், அழகுமீனா, அமுதா, அருந்ததி, ராஜலெட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் உறுதி கூறினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் நன்றி கூறினார்.

    • மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
    • கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுக்கொல்லி காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர். இக்கிராமத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லாததால், 3 கி.மீ. தூரத்தில் உள்ள கொல்லாலகுப்பம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை எட்டுவழி சாலைப் பணிகளுக்காக காட்டுக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் மலைப்பகுதியில் எட்டு வழிச்சாலை திட்ட அலுவலகம், தளவாடம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் அறைகள், கட்டப்பட்டதால் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வேலைக்கு சென்று வரவும், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சாலையில்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • ரெயில்வே பொதுமேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை
    • கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி ஏற்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வந்த திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட பொது மேலாளரிடம் கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா திருத்தல பங்குத்தந்தை அல்காந்தர் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் இக்பால் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைமனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி ஏற்பட்டபோது கடற்கரை பகுதியில் இருந்த ஏராளமான மீனவர் குடியிருப்புகள் பாதிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு வடக்கு புறம் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 700-க்கும் மேற்பட்ட சுனாமி குடியி ருப்புகள் கட்டப்பட்டன.

    இந்தப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் கன்னியாகுமரி யின் பிரதான பகுதிக்கு வருவதற்கும் இவர்கள் தொழில் செய்வதற்காக சின்னமுட்டம் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்வதற்கும் ரெயில்வே நிலையத்தை ஒட்டிஉள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருவதால் இந்த பாதையை தங்களுக்கு சீரமைத்து தருவ துடன் அந்தப் பாதையை பயன்படுத்து வதற்கு உரிய அனுமதியும் வழங்க வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
    • 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.

    அபிராமம்

    நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.

    தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    • தேவராஜ் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே வீரபத்திரன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தேவராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனை ஒட்டி தேவராஜ் எம்.எல்.ஏ வேடியப்பன் வட்டம் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சாலை அமைக்க இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் .

    பின்னர் அந்த பகுதிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் க்கு உத்தரவிட்டார்உடன் மாவட்ட துணைச் செயலாளர் அ.சம்பத்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல், இடைச் செயலாளர் பிரபு உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவினாசி,நவ.16-

    அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .

    கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது .
    • சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது .இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து ஒன்றரைகிலோமீட்டர் தூரத்திற்கு மிக மோசமாக குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது. இதனால் இந்த சாலைவழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயம் தொடங்கினால் விவசாய விளை பொருட்களை எளிதில் எடுத்து செல்ல முடியாமல் போய்விடக்கூடும். கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×