search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
    X

    வேதாரண்யம் ஒன்றிய குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் பேசினார்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

    • கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .

    கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    Next Story
    ×