search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறை கட்டிடம்"

    • பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
    • பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தின் மாடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி (திமுக) :

    ருத்திரசிந்தாமணி ஊராட்சியில் பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும். நீர் தேக்க தொட்டி, சமையல் கூடம் பழுது நீக்கி தர வேண்டும்.

    பாமா செந்தில்நாதன் (திமுக) :

    சாந்தாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும்.சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    சிவ.மதிவாணன் (அதிமுக) :

    கொள்ளுக்காடு ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    மீனவராஜன் (அதிமுக):

    மல்லிப்பட்டினத்தில் ராமர் கோயில் முதல் முஸ்லிம் தெரு வரை சாலை வசதி செய்து தர வேண்டும்.

    சாகுல் ஹமீது (திமுக) :

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் கஜா புயலில் சேதமடைந்த முத்தரையர் சுடுகாடு சீரமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

    கூட்டத்தில் செய்யது முகமது, சுதாகர், அழகுமீனா, அமுதா, அருந்ததி, ராஜலெட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் உறுதி கூறினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் நன்றி கூறினார்.

    • சோழவந்தான் அருகே பொது கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி பாழடைந்து காணப்படுகிறது.
    • சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தெருவில் வயலோர பகுதியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

    அப்போது தண்ணீர் மற்றும் மின் வசதிகள் இருந்ததால் பொதுமக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் மேற்கண்ட வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அரசும் கண்டுகொள்ளவில்லை.

    இதன் காரணமாக பொது கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்த புதராக மாறியுள்ளது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளன

    . மேலும் கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கட்டிடம் மாறியுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆரம்ப காலத்தில் இந்த கழிப்பறை கட்டிடத்தை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் வசதி இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் இருப்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×