என் மலர்
நீங்கள் தேடியது "Middle School"
- நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
12-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் வகுப்பறையில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் நெருக்கடியாக அமர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் சமையல் அறை அருகே சேதமான ஓட்டு மேற்கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7ம் வகுப்பறை களை இடித்து அப்புறபடுத்தி காலி இடமாக இருந்து வந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் யூனியன் பொறியாளர் மேற்பார்வையில் பள்ளி விடுமுறை நாளில் கழிப்பறை கட்ட குழி தோண்டி உள்ளனர்
இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மேலாண்மை குழு தலைவர் கலா கூறுகையில், இப்பள்ளி யில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் வேளையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7-ம் வகுப்பு கட்டிடம் அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.
இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை மற்ற வகுப்பறை கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடந்து வரும்நிலையில் சமையல் அறை அருகிலே விடுமுறை நாளில் கழிப்பிடம் கட்ட யூனியன் அதிகாரிகள் குழி தோண்டி உள்ளனர். காலியான பள்ளி இடத்தில் கான்கிரீட் கட்டிட வகுப்பறை கட்டி மாணவர்களில் இடநெருக்கடியை போக்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- விவசாயம், புத்தகம் படிப்பது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என செயல்முறை வடிவில் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து சென்றனர்.
- மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், மூளைத்திறனும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனாம்பாளையம் கிராமம்.
இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்பித்தால் போதாது அவர்களுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொள்வதற்காக ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களான யுவராணி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முடிவு செய்தனர்.
சுற்றுலா என்றவுடன் எங்காவது பூங்கா, சுற்றுலா தலங்கள், கண்காட்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வதை பார்த்திருப்போம்.
ஆனால் இந்த ஆசிரியர்கள் இருவரும் மாணவர்களை அப்படி அழைத்து செல்லாமல் விவசாயம், புத்தகம் படிப்பது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என செயல்முறை வடிவில் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து சென்றனர்.
இதற்காக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இதற்கு கிராம கல்வி சுற்றுலா என பெயரிட்டு மாணவர்களை அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
முதலில் அந்த பகுதியில் உள்ள நூலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குறித்தும், அதன் நோக்கம் மற்றும் அதனை எழுதியவர்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.
மேலும் மாணவர்கள் புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களது அறிவாற்றால் பெருகும், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் தோன்றும். மாணவர்களை அது நல்வழிப்படுத்தும் என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.
தொடர்ந்து அவர்களை பொம்மனாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னென்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன. எத்தனை நாளில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பொருளை எப்படி சந்தை படுத்துவது, பொருட்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை இப்படி பல்வேறு விஷயங்களை விவசாயிகள் மாணவர்களுக்கு கூறினர்.
மாணவர்களும், அவர்கள் கூறியவற்றை ஆர்வமுடன் கேட்டு கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேராக அந்த பகுதியில் நியாய விலைக்கடையில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ரேஷன் கடையில் உள்ள பொருட்கள், அவை எப்படி கொடுக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் கார்டு என்றால் என்ன?
ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரை எப்படி இணைப்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் அருகே உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்று, நியாய விலைக்கடைக்கும், மளிகை கடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் எடுத்து கூறினர்.
இறுதியாக மாணவர்களை குமாரசாமி நகரில் உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவர்கள், விளையாடி மகிழ்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இந்த ஒரு நாள் பயிற்சி என்பது மாணவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், அவர்கள் வருங்காலத்தில் என்ன ஆக விரும்புகிறார்களோ, அதனை அவர்களே சுயமாகவே முடிவு எடுத்து கொள்ளவும் உதவும். மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், மூளைத்திறனும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
- சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா முன்னிலை வகித்தார்
சிவகிரி:
சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பா ளரும் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்புரை வழங்கினார்.
வானவில் மன்றம் ஒருங்கிணைப்பாளர் செல்வி பிரியதர்ஷினி அறிவியல் மற்றும் கணித பரிசோதனை விளக்கங்கள் தந்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமசிவன், ஆசிரியை ஆரோக்கியமேரி மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
- பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் சீமான் தோட்ட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வகுப்பறையாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதனை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் பாடம் நடத்தி மாணவர்களின் கல்வி கற்கும் தரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு கூறினார். அப்பொழுது மாநகர திமுக செயலாளர் கே. எஸ்.ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி,மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.