search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி தரிசனம்"

    • ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பழனி:

    பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் பழனி ரோப்கார் வழியே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் ஆனந்தவிநாயகர் சன்னதியில் வழிபட்டார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்தார். தொடர்ந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    • படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
    • மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மேலும் நாளை (26ந் தேதி) பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

    இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
    • மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும், பள்ளி விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக விளங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கி ழமை மற்றும் முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர். மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் எடுத்த இடத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமித்தித்திருவிழா, கடந்த ஏப்ரல் 30-ந் தேதி பூச்செரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதா னம் மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி யுலா வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நடை பெற்ற திமிதித்திரு விழா வில், 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர். விழாவில், புதுச்சேரி போக்குவ ரத்துறை அமை ச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு த்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார்.
    • கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே புதுவண்டிப்பாளையத்தில் கரையேறவிட்டகுப்பத்தில், அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார். அந்த இடம் தான் கடலூர் புதுவண்டி பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயிலில அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகியுடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் கரையேறவிட்டகுப்பம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் கோயிலை வந்தடைந்தனர்.

    • கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவ பெருமானை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு நேற்றும் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து மகா தீப ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக் கபட்ட சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

     கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்த வாய்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் அல்லாமல் பிற மேல் சாதி சமூக மக்கள் மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கோவிலில் இதுநாள் வரையில் ஆதிதிராவிடர் மக்கள் உள்ளே நுழைந்து சாமி கும்பிட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஆதிதிராவிட மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இது நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் நுழைந்த சாமி கும்பிட வேண்டும் என ஆதிதிராவிட சமூக மக்கள் முடிவெடுத்து கடந்த 6 மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், இதனால் எழுந்த பிரச்சனையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கள்ளக்கு றிச்சி கோட்டாட்சியர் அலு வலகத்திலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 க்கும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். தற்போது டிஐஜி யாக பதிவி உயர்வு பெற்றுள்ள பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் அதிரடி படையினர் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜா பெருமாள் கோவிலுக்கு உள்ளே கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் நுழைந்து சாமி கும்பிட ஆரம்பித்தனர். கோவிலுக்குள் இதுவரை வராத ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோவி லுக்குள் நுழைந்து பெருமா ளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    அப்போது ஆதிதிராவிட சமூக மக்கள் அனைவரும் பரவசமாக காணப்பட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடு வதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வரு கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் எடுத்தவாய் நத்தம் கிராமத்திற்கு வந்து கண்காணித்து வந்தனர்.

    • இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
    • ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.

    ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.

    அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுமா?

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம்

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைெபறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் அதிக அளவில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்களுக்கு 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பொது தரிசனமும் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இந்த கோவிலில் குறைந்த அளவு கூட்டம் இருந்தாலும் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கியூ வரிசைகளை அமைத்து நேரடியாக தரிசனம் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தால்கூட பெரிய கூட்டம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

    இதனால் வெளியூர் பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் பொது தரிசனத்திற்கு எவ்வளவு கூட்டம் உள்ளதோ? அதே அளவுக்கு சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை இங்குமட்டும்தான் காண முடிகிறது. அதுவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய தனி கட்டணம், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய தனி கட்டணம் என 2 வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மேலும் கோவிலில் நுழையும்போது செல்போன்களும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கும் தனி கட்டணம் உள்ளது. இதுமட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் கட்டுபாடுகளை மீறி அழைத்து செல்லப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தாலும் அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பூஜை நேரங்களில் மணி கணக்கில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அப்போது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பெல்லாம் நேரடியாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தற்போது நீண்ட கியூ வரிசை பாதைகளை அமைத்து கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டம் இருப்பதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வரிசை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் தேவையின்றி நேர விரையம் ஏற்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    கோவிலில் பல சிலைகள் சேதமாகி உள்ளது. அவைகளை அவ்வப்போது சீரமைத்தால் கோவில் இன்னும் பொலிவுடன் திகழும். ஆனால் கும்பாபிஷேக காலங்களில் மட்டுமே திருப்பணிகள் செய்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

    கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டுமின்றி சிறப்பு கட்டண வசூல் உள்பட பல்வேறு வருமானங்கள் உள்ளது. அதில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வதில்லை. உபயத்தில் மட்டுமே பணிகளை செய்கின்றனர். கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

    மேலும் உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.

    • இன்று ஆவணி 3-வது ஞாயிறை முன்னிட்டு வழிபாடு
    • பால் ஊற்றி பெண்கள் வழிபாடு

    நாகர்கோவில், செப். 4-

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்தால் நினைத்தது கைகூடும், திருமணங்கள் நடக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    எனவே ஆவணி ஞாயிற்று க்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நாகராஜா கோவிலில் அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.இதை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷே கங்களும், அலங்கார தீபாரா தனைகளும் நடந்தது.

    காலை முதலே கோவி லில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவியும் பாலூட்டியும் வழிபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. கோவில் வளாகத்தை விட்டு நுழைவு வாயில் வெளியே வரை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு வசதியாக கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்திருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்க ப்பட்டது. கோவிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பாக்கெட் பால்களை கப்புகளில் கொண்டு வந்து நாகர் சிலைகளுக்கு ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர் .கோவிலுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனால் நாகராஜா திடலில் பக்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு சென்றிருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×