search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை முருகன் கோவிலில்"

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. அப்போது 963-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

    கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி மலை மீதுள்ள முருகன் கோவிலில் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி சூரனை வதம் செய்ய சாமி புறப்பாடு நடந்தது.

    இதையடுத்து முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அலங்கா ரம், பூஜைகள் செய்யப்ப ட்டது. பின்னர் 4 ராஜா வீதிகள் வழியாக முருகப்பெ ருமான் சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து திருக்கல்யாண வைபோகம் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெற்றது.

    அப்போது முருக ப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரி யார் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தினை நடத்தினார்.

    அதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.
    • நாளை திருக்கல்யாண விழா நடைபெறும்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீது அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா வருடந்ததோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியும், உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து இன்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி இதே நேரத்தில் நடந்தது. அதன் பின்பு இன்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடக்கிறது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநா தசிவ ச்சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைப்பார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் பயபத்தி யுடன் கண்டுகளிப்பர்.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளுவார். அதை தொடந்து நாளை காலை 10:30 மணிக்கு முருகப்பெ ருமான் தெய்வானையை மணம் செய்யும் திருக்க ல்யாண விழா நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், தலைமையில், கமிட்டியினர் மற்றும் முருகபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.
    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அர ங்கேறிய தலமாக விள ங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் வார ந்தோறும் செவ்வாய்க்கி ழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதியும் இணைந்து வந்ததால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர்.

    அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்தி ருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலும், மலை பாதையிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
    • மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும், பள்ளி விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக விளங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கி ழமை மற்றும் முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர். மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் எடுத்த இடத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
    • முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழித்து சகல நன்மைகளும் எல்லோருக்கும் வேண்டி அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அக்னி நட்சத்திர விழா அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக்குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பா ளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலை கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், அஸ்த்ர ஜபம் சாந்தி ேஹாமம் முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். பின்னர் அன்று காலை 7.30 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாரா தனையும், அதைத்தொடர்ந்து 1 மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக நேற்று காலை சாமி புறப்பாடு நடந்தது, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கு இருந்து சேவல் கொடியுடன் உற்ச மூர்த்திகள் முருகப்பெ ருமான் சமேதராக புறப்ப ட்டு படி வழியாக மலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் யாக பூஜை நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பஞ்சாமிருதம், பால், தயிர் உட்பட பல்ேவறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சாமி களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமைக் குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் கொடி மரத்திற்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு டவுன் கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதையடுத்த நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி காலை மகா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியா ளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    • மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது.
    • பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

    பின்னர் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அப்போது முருகப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் மலை கோவிலில் மேல் வாகனங்கள் நிறுத்த இடம்பற்றாக்குறை ஏற்பட்டது.

    பின்னர் கார்கள் நிறுத்தப்பட்டு 10 கார்கள் மட்டும் அனுமதிக்கபட்டு மீண்டும் 10 கார்கள் கீழே வந்தால் மேலும் 10 கார்களை அனுப்புவது என பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

    கோவில் வளாகத்தில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும், தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    • இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.
    • ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தொடர்ந்து மார்கழி முதல் தேதியில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இன்று மார்கழி சிறப்பு வழிபாடு மற்றும் செவ்வாய்க்கிழமை வழிபாடு பக்தர்களும் ஒரே நேரத்தில் காலையில் திரண்டதால் கடும் கூட்டம் அலைமோதியது.

    ஒரு மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    6, 7-வது வளைவு களிலேயே பொதுமக்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று சாமி தரிசனத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது பற்றி உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு. சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி மலைப்பாதையில் போக்கு வரத்து சீர் செய்தனர்.

    அதன் பின்பு பொது மக்கள் 9 மணி அளவில் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர். இந்த கடும் போக்குவரத்து நெருசலால் சென்னிமலை மலை கோவிலில் காலை நேரத்தில் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.மலை மேல் அமைந்துள்ள இக் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.

    இன்று கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

    12 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து சுப்பிரமணி சாமியை தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.

    திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    • சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.
    • இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் வருகிற 8-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது.

    அதனால் காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சுவாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும்.

    இந்நேரத்தில் மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசிக்கவோ அனுமதி இல்லை. இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்படும்.

    அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்க–ப்படுவர். அன்று மட்டும் இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
    • 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு 7.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1320 படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அமைக்கப் பட்டிருந்த, யாக சாலையில் விநாயகர் வழிபாடு, யாக பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட 108 வகையான திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகமும், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற, விழா நடைபெறும் ஆறு நாட்களும், விரதத்தை தொடங்கும் முகமாக கைகளில் காப்பு கட்டி கொண்டனர்.

    பக்தர்களுக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவம் காப்புகட்டிவிட்டார். கந்த சஷ்டி விழா, வருகிற 30-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அப்போது, தினமும் காலை 9.30 மணி முதல், பகல் 12 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக, விழா நடைபெறும் நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மாலை, 5.30 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக் கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை, அடிவாரத்திற்கு அழைத்து வந்து. அங்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும்.

    அதைத்தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல், சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ×