search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A large number of devotees"

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. அப்போது 963-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

    கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி மலை மீதுள்ள முருகன் கோவிலில் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி சூரனை வதம் செய்ய சாமி புறப்பாடு நடந்தது.

    இதையடுத்து முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அலங்கா ரம், பூஜைகள் செய்யப்ப ட்டது. பின்னர் 4 ராஜா வீதிகள் வழியாக முருகப்பெ ருமான் சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து திருக்கல்யாண வைபோகம் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெற்றது.

    அப்போது முருக ப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரி யார் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தினை நடத்தினார்.

    அதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது.

    சென்னிமலை:

    பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம்.

    புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ததாக கருதப்படுகிறது.

    நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் அமாவசையும் இணைந்து வந்ததால் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

    இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

    ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். 11 மணிக்கு பெருமாள் தாயாருடன் சகடை தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.

    சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முருங்கத்தொழுவு அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    ×