என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.
    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அர ங்கேறிய தலமாக விள ங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் வார ந்தோறும் செவ்வாய்க்கி ழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதியும் இணைந்து வந்ததால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர்.

    அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்தி ருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலும், மலை பாதையிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    Next Story
    ×