search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees gather"

    • மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    • கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    அறுடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கி ன்றனர். நேர்த்திக்க டனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

    பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்த மலை யில் குழந்தை வேலா யுதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர் பவனி நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷே கங்களும், அலங்காரமும் செய்யப்பட்டன. தொடர்ந்து சனிக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவமானது கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழாவையொட்டி தேர்திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். தேக்கம்பட்டி, மருதூர், புங்கம்பாளையம், காரமடை, மங்களக்கரை புதூர் உள்ளிட்ட கிரா மங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   

    • மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது.
    • பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

    பின்னர் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் சிறப்பு வழிபாடு அபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அப்போது முருகப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் மலை கோவிலில் மேல் வாகனங்கள் நிறுத்த இடம்பற்றாக்குறை ஏற்பட்டது.

    பின்னர் கார்கள் நிறுத்தப்பட்டு 10 கார்கள் மட்டும் அனுமதிக்கபட்டு மீண்டும் 10 கார்கள் கீழே வந்தால் மேலும் 10 கார்களை அனுப்புவது என பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

    கோவில் வளாகத்தில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருந்தது. சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும், தர்ம தரிசனத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்களை கூடுதல் முறை மலைகோவிலுக்கு இயக்கப்பட்டது.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர் புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    அதன் பிறகு சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்திருந்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×