search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees started"

    • கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
    • 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு 7.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, 1320 படிக்கட்டுகள் வழியாக, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அமைக்கப் பட்டிருந்த, யாக சாலையில் விநாயகர் வழிபாடு, யாக பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட 108 வகையான திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகமும், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற, விழா நடைபெறும் ஆறு நாட்களும், விரதத்தை தொடங்கும் முகமாக கைகளில் காப்பு கட்டி கொண்டனர்.

    பக்தர்களுக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவம் காப்புகட்டிவிட்டார். கந்த சஷ்டி விழா, வருகிற 30-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அப்போது, தினமும் காலை 9.30 மணி முதல், பகல் 12 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக, விழா நடைபெறும் நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மாலை, 5.30 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக் கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை, அடிவாரத்திற்கு அழைத்து வந்து. அங்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கும்.

    அதைத்தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல், சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ விதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்.

    ×