என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
    X

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

    பழனி முருகன் கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

    • ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பழனி:

    பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் பழனி ரோப்கார் வழியே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் ஆனந்தவிநாயகர் சன்னதியில் வழிபட்டார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்தார். தொடர்ந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×