search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

    • கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×