search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை"

    • குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
    • இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் சாக்கடை, குடிநீரிலும் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கைகள் தொடர்பாக நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்துள்ளேன்.

    குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க மதுரை மாநக ராட்சி கமிஷன ரிடம் பேசி இந்த பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

    • கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

    பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
    • அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் அந்த பகுதியில் பலருக்கு டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் பிரிவு சாலையோரம் உள்ள சாக்கடையில் இன்று காலை ஒரு நபர் மேல் சட்டை இல்லாமல் உள்ளாடை அணிந்த நிலையில் உள்ளே கிடந்தார்.

    பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தொண்டியில் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் சாக்கடையாக மாறிவருகிறது.
    • சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி-மதுரை சாலையும் சந்திக்கும் இடத்தில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

    சில மாதங்களில் பெய்த மழையால் இந்த குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. அதில் கரையே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை படர்ந்து குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் குளம் கழிவுநீர் சாக்கடையாக மாறிவருகிறது. அந்த பகுதியை கடந்தால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும், இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    ஆகாய தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி முன்பு போல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    அதற்கு முன்னதாக குளத்தை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு நோய் தொற்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • உடுமலை பழனி ரோட்டு ஹவுசிங் யூனிடில் அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர்.
    • இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலை பழனி ரோட்டில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளதால் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

    மேலும் குப்பைகளில் இருந்து விஷஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மிகவும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரியும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

    ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

    முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×