search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்காபிஷேகம்"

    • குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவார ஓடைக்கரையில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. அதன் 48-வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. கார்த்திக் பட்டர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை செய்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது
    • சோம வாரத்தை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. நேற்று சோமவாரம் நிறைவையொட்டி தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் 1008 சங்குகளுக்கும் கும்ப பூஜையும், மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்.
    • அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பகவான் சிவனின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக சிவன் பல ஆண்டுகளாக தியானம் செய்தார். தியானத்தில் இருந்து கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் ருத்ராட்சமாக ஈன்றெடுத்ததாக கூறப்படுகிறது.

    சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்தில் இருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்ச மாலை சிவனுக்கு பிரதானமானதாக விளங்குகிறது. கோவில்களில் ருத்ராட்சம் கொண்டு பந்தல் அமைத்தால் சன்னதி குளிர்ச்சியாக காணப்படும் என்பது ஐதீகம்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனகர்நாடு கோட்டை தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 5 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ராட்ச பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சாமி, அம்பாள் சன்னதியில் பொருத்தப்பட்டு வழிபாடு நடந்தது.

    அதுமட்டுமின்றி சோமவாரத்தையொட்டி கோவிலில் புனித நீர் அடங்கிய சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அவற்றைக்கொண்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரக சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.
    • சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று மூன்றாவது வார கார்த்திகை சோமவாரம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்கு பின்னர் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மதியம் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த சோமவார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல திருவெண்காடு அருகே நாங்கூர் நம்புவோருக்கு அன்பர் கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது. முன்னதாக சாமி, அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம்அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை  வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சார்பில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாகஇதில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, உள்ளிட்ட புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதையடுத்து சுவாமிக்கு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது .

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.

    இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

    அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

    இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடந்தது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சோனையா, கருப்பண சாமி, இருளன், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் அருணாச்சலம், குமார், தங்கராஜ், பாண்டி வேல், கல்யாணசுந்தரம், பாலு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் செய்தி ருந்தனர். மண்டல பூஜை விழாவை சிவாச்சா ரியார்கள் மனோகர குருக்கள், மகேஷ் குருக்கள் நடத்தினர்.

    • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.

    குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு தீபாரதனையும் நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு சங்கு பூஜையும், 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி3முறை மேள தாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்குஅருட்பிரசாதம்வழங்குதல் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 108 சங்கு மற்றும் குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சுவாமி சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
    ×