search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"

    • யாக பூஜைகள் நடத்தப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதனையொட்டி நேற்று யாக பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதில் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக கல்வடங்கம் காவிரி நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பாலதண்டாயுதபாணி சாமி கோவில் சன்னதியில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க, இன்று காலை கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் முழங்க முருகப்பெ ருமானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். 

    • ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலஸ்தானத்தில் பச்சையம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பரிவாரதெய்வங்களுக்கு ஏராளமான பொருட்கள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (புதன்கிழமை ) காலை9மணிக்குமேல் 10.30 மணிக்குள்நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் இன்று ( திங்கட் கிழமை )மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . இதற்கான ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர்சிறப்பாக செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    • பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரி யார்கள் 2 நாள் யாக பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சா ரியார்கள், நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ், ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன், கண்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நர்மா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பட்டாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.

    சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்து சென்றனர்.

    • புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி பஜனை கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் கவுண்டர் கே.ஜி. சரவணன், ஊர் தர்மகர்த்தா டி. சிவாஜி கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊர் கவுண்டர்கள் முனிசாமி, சாமிக்கண்ணு, முன்னாள் தர்மகர்த்தா நடராஜன், வார்டு உறுப்பினர் கீதா ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புனித தீர்த்தம் பெற்று ராதா -ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியின் அருளைப் பெற்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாரண்டஅள்ளி, 

    தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர், மாரியம்மன், கொல்லாபுரி மாரியம்மன் மற்றும் நவகிரக விக்ரகம் பிரதிஷ்டபான குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

    இந்த விழா கடந்த 2-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பிறகு கோ பூஜை, பிம்பதரிசனம். மஹா மங்களராத்தி. தீர்த்த பிரசாத விநியோக செய்து ஶ்ரீ வரசித்தி விநாயகர். ஸ்ரீ மாரியம்மன். ஸ்ரீ கொல்லாபுரி மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், செய்திருந்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி பரவசம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி சாமி வந்து ஆடினார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஒன்றிய கவுன்சிலர் சி.லட்சுமி சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

    நல்ல தம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், குணசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தது
    • பக்தர்கள் தரிசனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.தற்போது இந்த கோவில் அருகில் புதியதாக சீரடி சாய்பாபாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடும், மூலவர் சாய்பாபாவிற்கும் , கோபுர விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, அரசு மருத்துவமனை ஆலோசனைகுழு உறுப்பினர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சீவூர்துரைசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்., அரசு, ம.மனோஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.யுவராஜ்.கெங்கைம்மன் கோவில் நாட்டாண்மை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, ஆர்.ரவிசங்கர், எம். முத்து உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஆட்டோமோகன் மற்றும் உறுப்பினர்கள், விழாக்குழுவினர், புவனேஸ்வரிபேட்டை பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    ×