search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துண்டுகாடு கிராமத்தில் உள்ள அழகு முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்: நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கும்பாபிஷேகத்துக்கான சாரம் அமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    துண்டுகாடு கிராமத்தில் உள்ள அழகு முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்: நாளை மறுநாள் நடக்கிறது

    • துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பரிவாரதெய்வங்களுக்கு ஏராளமான பொருட்கள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (புதன்கிழமை ) காலை9மணிக்குமேல் 10.30 மணிக்குள்நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் இன்று ( திங்கட் கிழமை )மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . இதற்கான ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர்சிறப்பாக செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    Next Story
    ×