என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரி யார்கள் 2 நாள் யாக பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சா ரியார்கள், நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ், ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன், கண்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×