search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple kumbhabhishekam"

    • கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவில் உள்ள அய்யனார் சந்தனகருப்பு சுவாமி மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ம் தேதி முதல் நாள் அனுக்கை, தனபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    மறுநாள் அதே யாகசாலையில் 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்,குடமாக கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழத்தெரு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை சிறப்பாக அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
    • முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தட்சிணமா நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வருகிற 3-ந் தேதி நடக்கிறது
    • 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)காலை நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டு அறுசுவை அன்னதானம் நடைபெறும்.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறும்.முன்னதாக செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை)காலை மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும்.

    இரவு முத்து மாரியம்மன் நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிளாம்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • மூன்றாம் கால பூஜை நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து

    பின்னர் சிவாச்சாரியா ர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மகாதேவமலை மகானந்த சித்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
    • விழா ஏற்பாடுகளை பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை மகானந்த சித்தர், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவ னங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன், தலைவர் ஏ.தங்கமணி, செயலாளர் எம்.வஜ்ரவேல், பொருளாளர் டி.கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி காந்தி, துணை செயலாளர் கே.சுப்பிரமணி உள்பட விழா குழுவினர், பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோவில் நடைபெற்றது.

    இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருணாசலேசுவரர் கோவில் மகா கும்பாபி ஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை திருவண்ணாமலை தண்டபாணி சர்மா மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.

    இந்த விழாவில் குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், கவுன்சிலர் சுகுணா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் சதாசிவ சர்மா, கிரி சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் குப்பம் அண்ணாநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரருக்கு நேற்று 25-ந்தேதி யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.

    • பொது மக்களே நிதி திரட்டி புனரமைப்பு
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகரில் பழமைவாய்ந்த கற்பகாம்பிகை கோவில் உள்ளது.

    பொதுமக்களே நிதி திரட்டி முத்துமாரியம்மன் கற்பகாம்பிகை கற்பகநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் புனித தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து வருதல் திருவிளக்கு வழிபாடு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்வழிபாடு கணபதி ஹோமம், கோபூஜை, நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து இன்று காலையில் யாகசாலையில் விநாயகர் முருகர் தென்முகபரமன் அண்ணாமலையார் நான்முகன் துர்கையம்மன் சண்டீசுவரர் நடராசர் சிவகாமி நந்தி கௌமாரி மகேஸ்வரி வைஸ்ணவி பிராம்மி சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தினர்.

    பின்னர் புணிதநீரை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஸ்ரீ கற்பகநாதர் மற்றும் கற்பகாம்பிகை ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

    பக்தர்கள் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறுதி யாக கோவில் நிர்வாகம் சார்பில்அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யாகபூஜைகளும் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி காலை கோபூஜை, கணபதி ஹோமத்துடன் மாலை முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    5-ந் தேதி திங்கட்கிழமை காலை 2-ம் கால யாகபூஜைகளுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • யாக பூஜைகள் நடத்தப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதனையொட்டி நேற்று யாக பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதில் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலஸ்தானத்தில் பச்சையம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே. ராஜா எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×