search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் கும்பாபிஷேகம்
    X

    பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் கும்பாபிஷேகம்

    • வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது
    • பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வரும் 27 தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளன.

    இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி ஓமம் பூர்ணாவதி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×