search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"

    • வருகிற 3-ந் தேதி நடக்கிறது
    • 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே கிளாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)காலை நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டு அறுசுவை அன்னதானம் நடைபெறும்.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறும்.முன்னதாக செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை)காலை மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும்.

    இரவு முத்து மாரியம்மன் நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிளாம்பாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.
    • காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எழுந்த ருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் மகா மாரி யம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்கா

    ரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்கா வலர் குழுவினர், கால சந்தி கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    • மூன்றாம் கால பூஜை நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து

    பின்னர் சிவாச்சாரியா ர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மங்கல இசையுடன் கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து மகா கணபதிக்கும், மகா மாரியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    • மகாதேவமலை மகானந்த சித்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
    • விழா ஏற்பாடுகளை பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை மகானந்த சித்தர், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவ னங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன், தலைவர் ஏ.தங்கமணி, செயலாளர் எம்.வஜ்ரவேல், பொருளாளர் டி.கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி காந்தி, துணை செயலாளர் கே.சுப்பிரமணி உள்பட விழா குழுவினர், பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோவில் நடைபெற்றது.

    இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் ஸ்ரீ பண்டார அப்பிச்சி, பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வா கத்தினர் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் நான்கு கால பூஜைகள் கோவில் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோவில் கோபுர கலசத்திற்கு யாக சாலை பூஜையில் இருந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., பவானி அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் பாட்டாளி தினேஷ்குமார் நாயகர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும்

    பவானி, காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், பெரியமோள பாளையம் சின்னமோள பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பண்டார அப்பச்சி, மலையாள பகவதி அம்மன் மற்றும் பல்வேறு வகையான முனிஸ்வர சுவாமிகள் என கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சாமிகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருணாசலேசுவரர் கோவில் மகா கும்பாபி ஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை திருவண்ணாமலை தண்டபாணி சர்மா மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.

    இந்த விழாவில் குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், கவுன்சிலர் சுகுணா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் சதாசிவ சர்மா, கிரி சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் குப்பம் அண்ணாநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரருக்கு நேற்று 25-ந்தேதி யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.

    • பொது மக்களே நிதி திரட்டி புனரமைப்பு
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகரில் பழமைவாய்ந்த கற்பகாம்பிகை கோவில் உள்ளது.

    பொதுமக்களே நிதி திரட்டி முத்துமாரியம்மன் கற்பகாம்பிகை கற்பகநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் புனித தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து வருதல் திருவிளக்கு வழிபாடு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்வழிபாடு கணபதி ஹோமம், கோபூஜை, நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து இன்று காலையில் யாகசாலையில் விநாயகர் முருகர் தென்முகபரமன் அண்ணாமலையார் நான்முகன் துர்கையம்மன் சண்டீசுவரர் நடராசர் சிவகாமி நந்தி கௌமாரி மகேஸ்வரி வைஸ்ணவி பிராம்மி சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தினர்.

    பின்னர் புணிதநீரை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஸ்ரீ கற்பகநாதர் மற்றும் கற்பகாம்பிகை ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

    பக்தர்கள் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறுதி யாக கோவில் நிர்வாகம் சார்பில்அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யாகபூஜைகளும் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி காலை கோபூஜை, கணபதி ஹோமத்துடன் மாலை முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    5-ந் தேதி திங்கட்கிழமை காலை 2-ம் கால யாகபூஜைகளுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • யாக பூஜைகள் நடத்தப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதனையொட்டி நேற்று யாக பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதில் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார்
    • 95 அடி உயர ராஜகோபுரத்துடன் கோவில் கட்டப்படுகிறது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார்.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாலை கணபதி பூஜை செய்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெரும்புத்துர் ஸ்ரீமத்பரமஹம்ச இத்தியாதி ஸ்ரீஅப்பன்பரகால ராமனுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள்ஏ .சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் பங்கேற்று பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் கணபதி பூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தனர்.

    கோவிலின் ராஜகோபுரம் கோவில் வளாகத்தில் உள்ள சாமி கருவறை விமானங்கள் வைக்க கூடிய கலசங்களுக்கு பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து பரதநாட்டியம் ஆன்மீக சொற்பொழிவு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலையில் பரத நாட்டியம் கலைமாமணி தேச மங்கையர்கரசி தலைமையில் ஆன்மீக சொற்பொழிவும் ஏ.பி.மணிசங்கர் குழுவினரின் மங்கள லய நாதம் லட்சுமணன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (17-ம் தேதி ) காலை 10.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை மற்றும் வெங்கடஜலபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடஜலபதி சாமி திருக்கல்யாண உற்சவம் ஆன்மீக சொற்பொழிவு இன்னிசை கச்சேரி நாடகம் நடைபெறுகின்றன.

    மேலும் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகள் நடத்தபடுள்ளன. கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சௌந்தர்ராஜன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நடிகர் ரஜினிகாந்த், காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்திகிரி பாலமுருகன் அடிகளார், வேலூர் ஸ்ரீபுரம் சக்திஅம்மா, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வதாக புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சணமுகம் தெரிவித்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஏ.சி.எஸ் கல்லூரி செயலர் ஏ.சி.ரவி ஏ.சி.எஸ். மெட்ரிக் ப்ளளி தாளளரும் நகரமன்ற உறுப்பினருமான ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும பள்ளி முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    ×