search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"

    • கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் கோவில்பட்டி கீழத்தெருவில் உள்ள அய்யனார் சந்தனகருப்பு சுவாமி மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி சந்தனக் கருப்பு சுவாமி கோவிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ம் தேதி முதல் நாள் அனுக்கை, தனபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    மறுநாள் அதே யாகசாலையில் 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்,குடமாக கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழத்தெரு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை சிறப்பாக அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
    • முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தட்சிணமா நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம்.
    • இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திட 2016-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் குடமுழுக்கு தள்ளிப் போனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த 2021 ஜூலை மாதம் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தோம்.

    அதனைத் தொடர்ந்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மீண்டும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் 21 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.

    இக்கோவிலை பொருத்தளவில் கடைசியாக எப்பொழுது குடமுழுக்கு நடைபெற்றது என்ற வரலாறே இல்லை. 1993-ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    இப்படி நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,118 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது.

    அதேபோல கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதால் தங்கத்தேரானது பவனி வரவில்லை. தற்போது உபயதாரர்கள் நிதியுதவிடன் ரூ.3.04 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் இன்றைக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது.

    கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5,473 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கரதங்களும், 57 வெள்ளி ரதங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

    ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம், புரசைவாக்கம் மற்றும் நங்கநல்லூர் ஆகிய திருக்கோவில்களுக்கு புதிய தங்கத்தேர் செய்திடவும், திருத்தணி, இருக்கன் குடி, சென்னை காளிகாம்பாள், திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோவில்களுக்கு புதிய வெள்ளித்தேர்கள் செய்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி வெள்ளித் தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.

    அதேபோல் ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியானது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தி வசை பாடியவர்கள் எல்லாம் வாழ்த்துகின்ற நிலையை உருவாக்கி உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம், எம்மதமும் சம்மதமே என்று ஆட்சி நடத்துகின்றார். அதற்கு சாட்சியாக இன்றைக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு அருகில் உள்ள மசூதியில் இருந்து பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்களை வழங்கிய நிகழ்வே அமைந்துள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் சுதந்திரமாக மத வழிபாடுகளை செய்வதற்கு இந்த ஆட்சியிலே பாதுகாப்பு இருக்கின்றது என்பதற்கும் இதனை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 7,036 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 3000-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 4 ஆயிரம் கோவில்களுக்கும் திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருகால பூஜைத் திட்டத்திற்கு ரூ.200 கோடியும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைக்க ரூ. 200 கோடியும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கோவில்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினத்திற்கு ரூ.37 கோடியும், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடிட ரூ.3.25 கோடியும், ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்திற்கு ரூ. 1.25 கோடியும் என பல்வேறு திட்டங்களுக்கு அரசு மானியங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் இந்த அளவிற்கு அரசு மானியம் வழங்கப்பட்டதே இல்லை. எங்களை பொறுத்தளவில் சிறிய கோவில்கள், பெரிய கோவில்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலங்களாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் 'நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா மரூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், பின் முதற்கால யாக பூஜை, விசேஷ திவ்யஹோமம், அதைத்தொடர்ந்து இரவு பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின் இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ஸாபர்சாஹீதி, காலை 9 மணிக்கு மஹா பூர்ணா ஹீதி, மஹா தீபராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கிய விழா பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.

    • மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி மஞ்சள்பரப்பு மலைகிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் விநாயகர் அனுக்கை, கிராம தேவதைகள் அனுக்கை, சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு மேல் காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் திருப்பள்ளியெழுச்சி, விநாயகர் பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், கருடாழ்வார் வழிபாடு, கணபதி ஹோமம், சண்முக சடாட்சர ஹோமம், ருத்ர ஹோமம், நவசக்தி ஹோமம் மற்றும் 3ம் கால மகா பூர்ணாகுதி வேதபாராயணம் பஞ்சபுராணம் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் யாகசாலை யில் நாடி சந்தானம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    அதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி யளித்த காளியம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் காளியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று சூரிய ராஜ் ஓடையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை என்.பி.ஆர்., பி.கே.டி. பங்காளிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.
    • ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் இன்று காலை 7.15 மணியளவில் ராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆதீனங்களுக்கும், உபயதாரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த பிறகு குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோவில்களுக்கு உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

    அந்த வகையில் குடமுழுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரிய மாணிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற கோவில்களுக்கும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டு தோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதி திராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோவில்களின் வைப்பு நிதி ரூ.ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-2024-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோவில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.

    தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.

    பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.

    இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் சமேத சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கியது. நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் நேற்று 5-ம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.10 மணிக்கு திருக்கயிலாய வாத்தியங்களுடன் தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு போலீசார் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மீனாட்சியம்மன், சிவபெருமான் உருவ படம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சின்னஞ்செட்டியார் வம்சாவழிகள் மற்றும் 24 மனை தெலுங்குசெட்டியார்கள், தவளையர் கோத்திரத்தினர் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே ஏழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஏழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த சில மாதங்க ளுக்கு முன்பு பாலாலயபூஜை நடத்தப்பட்டு கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சா ரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    முன்னதாக சிவனடியார் கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்க ளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×