search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple consecration"

    • ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார்
    • 95 அடி உயர ராஜகோபுரத்துடன் கோவில் கட்டப்படுகிறது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜகோபுரத்துடன் புதிய வெங்கடஜலபதி பெருமாள் கோவில் கட்டியுள்ளார்.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று மாலை கணபதி பூஜை செய்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெரும்புத்துர் ஸ்ரீமத்பரமஹம்ச இத்தியாதி ஸ்ரீஅப்பன்பரகால ராமனுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள்ஏ .சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் பங்கேற்று பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் கணபதி பூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தனர்.

    கோவிலின் ராஜகோபுரம் கோவில் வளாகத்தில் உள்ள சாமி கருவறை விமானங்கள் வைக்க கூடிய கலசங்களுக்கு பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து பரதநாட்டியம் ஆன்மீக சொற்பொழிவு பட்டிமன்றம் நடந்தது. இன்று காலையில் பரத நாட்டியம் கலைமாமணி தேச மங்கையர்கரசி தலைமையில் ஆன்மீக சொற்பொழிவும் ஏ.பி.மணிசங்கர் குழுவினரின் மங்கள லய நாதம் லட்சுமணன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (17-ம் தேதி ) காலை 10.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை மற்றும் வெங்கடஜலபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடஜலபதி சாமி திருக்கல்யாண உற்சவம் ஆன்மீக சொற்பொழிவு இன்னிசை கச்சேரி நாடகம் நடைபெறுகின்றன.

    மேலும் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெரிய ஜீயர்கள் சின்ன ஜீயர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பட்டாச்சியார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகள் நடத்தபடுள்ளன. கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தெலுங்கான மாநில கவர்னர் தமிழசை சௌந்தர்ராஜன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நடிகர் ரஜினிகாந்த், காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ரத்திகிரி பாலமுருகன் அடிகளார், வேலூர் ஸ்ரீபுரம் சக்திஅம்மா, திரையுலகினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வதாக புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சணமுகம் தெரிவித்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஏ.சி.எஸ் கல்லூரி செயலர் ஏ.சி.ரவி ஏ.சி.எஸ். மெட்ரிக் ப்ளளி தாளளரும் நகரமன்ற உறுப்பினருமான ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும பள்ளி முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கல்லலில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    கல்லல்:

    காரைக்குடியை அடுத்த கல்லலில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவின்போது நடைபெறும் தேரோட்ட விழாவில் கல்லலில் உள்ள 44 ஊராட்சிக்குஉட்பட்ட 22 கிராம மக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்காக மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருவது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது.

    இதையடுத்து கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோவில் சுவற்றுக்கு வர்ணம் அடிப்பதற்காக சாரம் பூசப்பட்ட நிலையில் இந்து சமய நிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்கான அனுமதி வழங்காததால் இன்றுவரை அந்த கோவிலில் எந்தவித திருப்பணியும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதையடுத்து கோவில் கோபுரங்களில் திருப்பணி வேலைக்காக கட்டப்பட்ட சாரம் உறுதியற்ற நிலையில் தற்போது உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கல்லலில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விமான கோபுரம் உள்பட 13 கோபுரங்கள் உள்ளன. இதுதவிர சிவன், அம்பாள், பைரவர், மகாலெட்சுமி, படிக்காசு விநாயகர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்காமல் உள்ளதால் இந்த பகுதியில் போதிய மழையில்லாமலும், தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்து வருகிறது.

    பல்வேறு கிராம மக்கள் இந்த தெப்பக்குளத்தை குளிப்பதற்கு, துணி சலவை உள்ளிட்ட தேவைக்கு பயன்படுத்தி வரும் வேளையில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது.

    எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கி விட்டு கல்லல் மற்றும் அதை சுற்றியுள்ள 22 கிராம மக்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×