search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • மங்கல இசையுடன் கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி தீர்த்தம் எடுத்து வருதல், மகா கணபதி ஹோமம், 2-ம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல், 3-ம் கால பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை மங்கல இசையும், 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மகா கணபதி, மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து மகா கணபதிக்கும், மகா மாரியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டது.

    Next Story
    ×