குப்பம் அருணாசலேஸ்வரர் கோவில், முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குப்பம் அருணாசலேஸ்வரர் கோவில், முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருணாசலேசுவரர் கோவில் மகா கும்பாபி ஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை திருவண்ணாமலை தண்டபாணி சர்மா மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.

இந்த விழாவில் குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், கவுன்சிலர் சுகுணா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் சதாசிவ சர்மா, கிரி சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் குப்பம் அண்ணாநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரருக்கு நேற்று 25-ந்தேதி யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com