என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, அரசு மருத்துவமனை ஆலோசனைகுழு உறுப்பினர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சீவூர்துரைசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்., அரசு, ம.மனோஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.யுவராஜ்.கெங்கைம்மன் கோவில் நாட்டாண்மை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, ஆர்.ரவிசங்கர், எம். முத்து உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஆட்டோமோகன் மற்றும் உறுப்பினர்கள், விழாக்குழுவினர், புவனேஸ்வரிபேட்டை பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.