search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரகாளி அம்மன்"

    • 15-ந் தேதி தொடங்குகிறது
    • அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.

    கொல்லங்கோடு :

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இதுதவிர கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, வித்யாரம்பம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு வழக்கமான பூஜைகளான லலிதா சகஸ்ர நாமம், லட்சார்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சங்கீதார்ச்சனை சங்கீத சதஸ் மற்றும் நவராத்திரி விசேஷ பூஜைகள் நடக்கிறது.

    24-ந் தேதி காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு முதன் முதலாக கற்பிக்கின்ற வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் 4-ம் திருவிழா, முதல் தந்திரி ஆலிவாசேரி நீலமன மடம் பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சீனிவாசன் தம்பி, துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், இணை செயலாளர் பிஜுகுமார். உறுப்பினர்கள் சுஜிகுமார். புவனேந்திரன் நாயர். ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர். பிஜு, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரி யார்கள் 2 நாள் யாக பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சா ரியார்கள், நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ், ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன், கண்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×